ETV Bharat / state

தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக அழித்தவர் ராஜபக்ச - இலங்கை எம்பி பேட்டி

author img

By

Published : Sep 4, 2019, 12:06 PM IST

மதுரை: பிரபாகரன் இருந்திருந்தால் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இருக்காது என ராஜபக்சே கூறுவது அரசியல் லாபத்துக்காக மட்டுமே. இலங்கை தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக அழித்தவர் ராஜபக்ச என இலங்கை மட்டகளப்பு எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறியுள்ளார்.

Sri Lanka MP Sinitambi Yogeswaran said rajapaksa is the one who destroyed the Tamil people in clusters

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நடைபெற்றது. இதில் இலங்கை மட்டகளப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட சீனித்தம்பி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "விநாயகர் சதுர்த்தி போன்ற ஆன்மிக நிகழ்வுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் எங்களது மட்டகளப்பு பகுதியில் நடைபெற்றது.

இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இந்தத் தாக்குதலை நிகழ்த்தியது. இந்தத் தாக்குதல் குறித்து இந்தியா முன்னரே இலங்கையை எச்சரித்தது. இதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்தியா தகவல் அளித்தும் இலங்கை அரசு அதை பொருட்படுத்தவில்லை.

தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக அழித்தவர் ராஜபக்ச

பிரபாகரன் இருந்திருந்தால் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றிருக்காது என ராஜபக்ச கூறுவது அரசியல் லாபத்துக்காக மட்டுமே. இது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோல. இலங்கை தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக அழித்தவர் ராஜபக்ச" எனக் கூறினார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நடைபெற்றது. இதில் இலங்கை மட்டகளப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்ட சீனித்தம்பி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "விநாயகர் சதுர்த்தி போன்ற ஆன்மிக நிகழ்வுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் எங்களது மட்டகளப்பு பகுதியில் நடைபெற்றது.

இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இந்தத் தாக்குதலை நிகழ்த்தியது. இந்தத் தாக்குதல் குறித்து இந்தியா முன்னரே இலங்கையை எச்சரித்தது. இதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்தியா தகவல் அளித்தும் இலங்கை அரசு அதை பொருட்படுத்தவில்லை.

தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக அழித்தவர் ராஜபக்ச

பிரபாகரன் இருந்திருந்தால் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றிருக்காது என ராஜபக்ச கூறுவது அரசியல் லாபத்துக்காக மட்டுமே. இது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோல. இலங்கை தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக அழித்தவர் ராஜபக்ச" எனக் கூறினார்.

Intro:தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக அழித்தவர் ராஜபட்சே - இலங்கை எம்பி சீனித்தம்பி யோகேஸ்வரன்

'பிரபாகரன் இருந்திருந்தால் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இருக்காது என ராஜபக்சே கூறுவது அரசியல் லாபத்துக்காக மட்டுமே. இது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல. இலங்கை தமிழ் மக்களை கொத்து கொத்தாக அழித்தவர் ராஜபட்சே' என இலங்கை மட்டகளப்பு எம்.பி.சீனிதம்பி யோகேஸ்வரன் மதுரையில் பேட்டி
Body:தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக அழித்தவர் ராஜபட்சே - இலங்கை எம்பி சீனித்தம்பி யோகேஸ்வரன்

'பிரபாகரன் இருந்திருந்தால் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இருக்காது என ராஜபக்சே கூறுவது அரசியல் லாபத்துக்காக மட்டுமே. இது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல. இலங்கை தமிழ் மக்களை கொத்து கொத்தாக அழித்தவர் ராஜபட்சே' என இலங்கை மட்டகளப்பு எம்.பி.சீனிதம்பி யோகேஸ்வரன் மதுரையில் பேட்டி

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு மதுரை மாநகர் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் இலங்கை மட்டகளப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மதுரை கீழ மாசி வீதி, தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி வழியாக சிம்மக்கல் அருகே வைகை ஆற்றுக்கு சிலைகள் அனைத்தும் கொண்டு செல்லப்பட்டன. விநாயகர் ஊர்வலத்தின் முன்பாக மேளதாளங்கள் முழங்க 2 அடி முதல் 5 அடி உயரம் வரை உள்ள சிலைகள் பங்கு பெற்றதன.

பெண்கள், சிறுமிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் தலையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் முடிவில் சிம்மக்கல் அருகே வைகை ஆற்றில் விநாயகர் சிலைகள் ஆற்று நீரில் கரைக்கப்பட்டதன விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக 200க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

விழாவில் கலந்து கொண்ட இலங்கை எம்.பி சீனித்தம்பி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், 'விநாயகர் சதூர்த்தி போன்ற ஆன்மீக நிகழ்வுக்கு மத்திய மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், இலங்கையில் தீவிரவாத தாக்குதல் எங்களது பகுதியில் நடைபெற்றது, இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இதனை நிகழ்த்தியது. இந்த தாக்குதல் குறித்து இலங்கையை முன்னரே இந்தியா எச்சரித்தது. இதற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்தியா தகவல் அளித்தும் இலங்கை அரசு அதை பொறுப்படுத்தவில்லை.

பிரபாகரன் இருந்திருந்தால் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இருக்காது என ராஜபக்சே கூறுவது அரசியல் லாபத்துக்காக மட்டுமே. இது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல. இலங்கை தமிழ் மக்களை கொத்து கொத்தாக அழித்தவர் ராஜபக்ச' என்றார்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.