ETV Bharat / state

காமராஜர் பல்கலை. புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ் - காமராஜர் பல்கலைக்கழகம்

மதுரை: காமராஜர்  பல்கலைக்கழகத்திற்கு புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரை நியமிக்கக் கோரிய வழக்கில், உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர், பல்கலைக்கழக துணைவேந்தர், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By

Published : Apr 24, 2019, 1:54 PM IST

மதுரை புதூரைச் சேர்ந்த ஜேசுராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,"மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1966ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்றன.

இந்தப் பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஓ.ரவி என்பவர் உள்ளார்.

இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் இவரை இந்தப் பணியில் நியமித்ததற்கு எதிராக தடை பெறப்பட்டுள்ளது. ஆனாலும் எந்த ஒப்புதலும் இன்றி, அந்தப் பணியில் தொடர்ந்துவருகிறார்.

எனவே இவருக்கு பதிலாக புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரை நியமிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கும், காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

எனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, வழக்கு குறித்து உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

மதுரை புதூரைச் சேர்ந்த ஜேசுராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,"மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1966ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்றன.

இந்தப் பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஓ.ரவி என்பவர் உள்ளார்.

இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் இவரை இந்தப் பணியில் நியமித்ததற்கு எதிராக தடை பெறப்பட்டுள்ளது. ஆனாலும் எந்த ஒப்புதலும் இன்றி, அந்தப் பணியில் தொடர்ந்துவருகிறார்.

எனவே இவருக்கு பதிலாக புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரை நியமிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கும், காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

எனவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, வழக்கு குறித்து உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

மதுரை காமராஜர்  பல்கலைக்கழகத்திற்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரை நியமிக்கக் கோரிய வழக்கில், உயர்கல்வித்துறை முதன்மை செயலர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், கல்லூரிக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு .


மதுரை புதூரை சேர்ந்த ஜேசுராஜா,   உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்   மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1966 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள.  100 க்கும் மேற்பட்ட     கல்லூரிகள் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்றன. இந்த பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக ஓ.ரவி என்பவர் உள்ளார். 
இவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் இவரை இந்த பணியில் நியமித்ததற்கு எதிராக தடை பெறப்பட்டுள்ளது. ஆனாலும் எந்த ஒப்புதலும் இன்றி, அந்த பணியில் தொடர்ந்து வருகிறார்.
எனவே இவருக்கு பதிலாக புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரை நியமிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களின் வேந்தருக்கும், காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
எனவே மதுரை காமராஜர்    பல்கலைக்கழகத்திற்கு  புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, வழக்கு குறித்து உயர்கல்வித்துறை முதன்மை செயலர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், கல்லூரிக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.