ETV Bharat / state

தேர்தல் பாதுகாப்புப் பணியில் 2,200 காவலர்கள் - மாவட்ட தேர்தல் அலுவலர் - பாதுகாப்பு பணி

மதுரை : மக்களவைத் தேர்தலின்போது பாதுகாப்புப் பணியில் 2,200 காவல் துறையினர் ஈடுபடுவதாக மாவட்டத் தேர்தல் அலுவலருமான நடராஜன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட தேர்தல் அலுவலர்
author img

By

Published : Apr 12, 2019, 9:36 AM IST

இது குறித்து அவர் கூறியதாவது, 'மதுரை மாவட்டத்தில் 11,258 அரசு ஊழியர்கள் மற்றும் 2,815 காவல் துறையினர் அஞ்சல் வாக்குப்பதிவு செய்யவுள்ளனர். அவர்களுக்கான வாக்கு சீட்டுகள் கொடுக்கும் பணிகள் இன்று நிறைவு பெறும்.தபால் ஓட்டுகள் 100% பதிவாகும் வண்ணம், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மதுரை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு 1500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்த அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2200 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை 197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தேர்தல் பரப்புரை செய்ய அனுமதிக் கோரி 1009 மனுக்கள் வந்த நிலையில், 944 மனுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் 27 வேட்பாளர்களில் 4 வேட்பாளர்கள் தேர்தல் கணக்கு தாக்கல் செய்யவில்லை' என தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது, 'மதுரை மாவட்டத்தில் 11,258 அரசு ஊழியர்கள் மற்றும் 2,815 காவல் துறையினர் அஞ்சல் வாக்குப்பதிவு செய்யவுள்ளனர். அவர்களுக்கான வாக்கு சீட்டுகள் கொடுக்கும் பணிகள் இன்று நிறைவு பெறும்.தபால் ஓட்டுகள் 100% பதிவாகும் வண்ணம், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மதுரை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு 1500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்த அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2200 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை 197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தேர்தல் பரப்புரை செய்ய அனுமதிக் கோரி 1009 மனுக்கள் வந்த நிலையில், 944 மனுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் 27 வேட்பாளர்களில் 4 வேட்பாளர்கள் தேர்தல் கணக்கு தாக்கல் செய்யவில்லை' என தெரிவித்தார்.

வெங்கடேஷ்வரன்
மதுரை
11.04.2019


*தேர்தலுக்காக 2200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்*



நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு முடிந்தவுடன் இடைத்தேர்தல் பணிகள் தொடங்கும், துணை இராணுவம், வெளி மாநில காவல்துறை, ஐ.டி.பி.ஐ என 10 கம்பெனியை சேர்ந்த 2200 பேர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பேட்டி...


மதுரை பாராளுமன்ற தேர்தலையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான  நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் ....

அப்போது அவர்..

 மதுரை மாவட்டத்தில் 11,258 அரசு ஊழியர்கள் மற்றும் 2,815 காவல்துறை தபால் வாக்குகள் உள்ளன, அவர்களுக்கான வாக்கு சீட்டுகள் கொடுக்கும் பணிகள் நாளை நிறைவு பெறும், தபால் ஓட்டுகள் 100% பதியும் வண்ணம், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மதுரை மாவட்டத்தில் வாக்கு சாவடிகளுக்கு 1500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர், "திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன, நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு முடிந்தவுடன் இடைத்தேர்தல் பணிகள் தொடங்க உள்ளது. மதுரையில் நடைபெற உள்ள தேர்தலையொட்டி துணை இராணுவம், வெளி மாநில காவல்துறை, ஐ.டி.பி.ஐ என 10 கம்பெனியை சேர்ந்த 2200 பேர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்," தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை 197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதேபோல் தேர்தல் பிரச்சாரம் செய்ய 1009 மனுக்கள் வந்த நிலையில் 944 மனுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  பணம் கொடுக்க டோக்கன் கொடுத்தற்காக 1 வழக்கு பதிவு செய்து, 6 டோக்கன்கள் மற்றும்  2 பட்டியல் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது, அதேபோல் இந்த தேர்தலில் போட்டியிடும்  27 வேட்பாளர்களில் 4 வேட்பாளர்கள் தேர்தல் கணக்கு தாக்கல் செய்யவில்லை என அப்போது தெரிவித்தார்.


Visual send in mojo kit
Visual name : TN_MDU_01_11_ELECTION PRESS MEET_TN10003

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.