ETV Bharat / state

மதுரை விமான நிலையத்தில் 350 கிராம் தங்கம் பறிமுதல்!

author img

By

Published : Oct 26, 2019, 10:26 AM IST

மதுரை: சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் மதுரைக்கு வந்த பயணியிடமிருந்து 350 கிராம் தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவுப் பிரிவினருக்கு, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணி ஒருவர் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து நுண்ணறிவுப் பிரிவின் உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையிலான அலுவலர்கள், நேற்று மாலை வெளிநாட்டிலிருந்து வந்த விமானப் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டர். அப்போது திருச்சியைச் சேர்ந்த ஜெயச்சந்திரனின் மகன் தேவநாத் என்பவரது உடமைகளை சோதனை செய்தபோது அவர் கொண்டுவந்த 'டிரில்லர்' இயந்திரத்தில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது.

விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

தேவநாத்திடம் இருந்து 350 கிராம் வட்ட வடிவிலான தங்கத்தை இலாகா நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.13 லட்சத்து 39 ஆயிரம் ஆகும். தங்கம் கடத்திவந்த தேவநாத்தை கைது செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : விமான நிலையத்தில் ரூ.91.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவுப் பிரிவினருக்கு, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணி ஒருவர் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து நுண்ணறிவுப் பிரிவின் உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையிலான அலுவலர்கள், நேற்று மாலை வெளிநாட்டிலிருந்து வந்த விமானப் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டர். அப்போது திருச்சியைச் சேர்ந்த ஜெயச்சந்திரனின் மகன் தேவநாத் என்பவரது உடமைகளை சோதனை செய்தபோது அவர் கொண்டுவந்த 'டிரில்லர்' இயந்திரத்தில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது.

விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

தேவநாத்திடம் இருந்து 350 கிராம் வட்ட வடிவிலான தங்கத்தை இலாகா நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.13 லட்சத்து 39 ஆயிரம் ஆகும். தங்கம் கடத்திவந்த தேவநாத்தை கைது செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : விமான நிலையத்தில் ரூ.91.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

Intro:*சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணியிடம் சோதனை செய்தபோது டிரில்லர் இயந்திரத்தில் மறைந்து கடத்தி 350 கிராம் வட்ட வடிவிலான தங்கம் ரூ 13 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.*Body:*சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணியிடம் சோதனை செய்தபோது டிரில்லர் இயந்திரத்தில் மறைந்து கடத்தி 350 கிராம் வட்ட வடிவிலான தங்கம் ரூ 13 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.*

மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு சிங்கப்பூரில் இருந்து வரும் பயணி கடத்தலில் ஈடுப்பட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலையடுத்து மத்திய சுங்க இலகா நுண்ணறிவு பிரிவினர் உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையில் வெளி நாட்டில் இருந்து வரும் விமான பயணிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சிங்கப்பூர் இருந்து மதுரை வந்த ஏர்இந்தியா எஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்ட போது திருச்சியை சேர்ந்த தேவநாத் S/O ஜெயச்சந்திரன் என்பவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் அவர் டிரில்லர் இயந்திரத்தில் மறைத்து தங்க கடத்தி வந்தது தெரிந்தது அவரிடம் 350 கிராம் வட்ட வடிவ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 13 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மறைத்து வைக்கப்பட்டது என்று தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடமிருந்து தங்க தகட்டை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.