ETV Bharat / state

Madurai Train Fire: மதுரை ரயில் தீ விபத்தில் பலியானோர் விவரங்கள் வெளியீடு; சுற்றுலா நிறுவனத்தின் மீது வழக்கு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 4:10 PM IST

Madurai train fire accident victims: மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 9 நபர்களில் 7 பேரின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தீ விபத்தில் படுகாயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 39 பேருக்கு உதவிகள் செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்து
ரயில் விபத்து

மதுரை: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து ஆன்மிக பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்த சிறப்பு பெட்டி மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. இன்று அதிகாலை அந்த பெட்டியில் திடீரென தீ பற்றியது. இந்த விபத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 9 பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சட்ட விரோதமாக சிலிண்டரை கொண்டு வந்து ரயில் பெட்டியில் சமைத்ததே தீ விபத்துக்குக் காரணம் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெற்கு ரயில்வே தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பரமேஸ்குமார் குப்தா (55), அங்குலி ஹரியா (36), சந்திரமான் சிங்(65) மனோரமா அகர்வால் (81), குமாரி ஹேமானி பேரியல் (22), மிதிலேஷ் குமாரி (62), சாந்தி தேவி வர்மா (57) ஆகிய 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஞ்சிய 2 பேர் யார் என்பதை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Madurai train fire accident: பயண நிறுவனம் வழங்கிய சிலிண்டரில் தான் சமைத்து வந்ததாக பயணி தகவல்!

இந்நிலையில், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 39 பேருக்கு உதவிகள் செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசிய வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

இதனிடையே, விபத்து தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரை சேர்ந்த பேசின் என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரயில்வே பாதுகாப்பு சட்டம் 67, 164 மற்றும் 165 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் அறிவித்துள்ளனர்.

  • 🚨மதுரை ரயில் நிலையத்தில் தீ விபத்து!

    அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடி நடவடிக்கை!

    *விபத்தினால் மதுரை சந்திப்பு வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை*🚨@GMSRailway @RailMinIndia #drmadurai #DRMMDU #SafetyFirst

    — DRM MADURAI (@drmmadurai) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மதுரை ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த இந்த தீ விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் சேவையில் எவ்வித பாதிப்பும் இல்லை என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Madurai Train Fire Accident: வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்.. பூட்டப்பட்ட கதவுகள்.. அப்பட்டமான விதிமீறல்..?

மதுரை: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து ஆன்மிக பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்த சிறப்பு பெட்டி மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. இன்று அதிகாலை அந்த பெட்டியில் திடீரென தீ பற்றியது. இந்த விபத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 9 பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சட்ட விரோதமாக சிலிண்டரை கொண்டு வந்து ரயில் பெட்டியில் சமைத்ததே தீ விபத்துக்குக் காரணம் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெற்கு ரயில்வே தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பரமேஸ்குமார் குப்தா (55), அங்குலி ஹரியா (36), சந்திரமான் சிங்(65) மனோரமா அகர்வால் (81), குமாரி ஹேமானி பேரியல் (22), மிதிலேஷ் குமாரி (62), சாந்தி தேவி வர்மா (57) ஆகிய 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஞ்சிய 2 பேர் யார் என்பதை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Madurai train fire accident: பயண நிறுவனம் வழங்கிய சிலிண்டரில் தான் சமைத்து வந்ததாக பயணி தகவல்!

இந்நிலையில், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 39 பேருக்கு உதவிகள் செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசிய வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

இதனிடையே, விபத்து தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரை சேர்ந்த பேசின் என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரயில்வே பாதுகாப்பு சட்டம் 67, 164 மற்றும் 165 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் அறிவித்துள்ளனர்.

  • 🚨மதுரை ரயில் நிலையத்தில் தீ விபத்து!

    அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடி நடவடிக்கை!

    *விபத்தினால் மதுரை சந்திப்பு வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை*🚨@GMSRailway @RailMinIndia #drmadurai #DRMMDU #SafetyFirst

    — DRM MADURAI (@drmmadurai) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மதுரை ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த இந்த தீ விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் சேவையில் எவ்வித பாதிப்பும் இல்லை என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Madurai Train Fire Accident: வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்.. பூட்டப்பட்ட கதவுகள்.. அப்பட்டமான விதிமீறல்..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.