மன்னர் திருமலை நாயக்கரின் 437ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், மாலை அணிவித்து மரியாதை செய்தார். பல்வேறு தெலுங்கு அமைப்புகளின் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற அவர் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "சமூகத்திற்குச் சேவை செய்வதே எனது நோக்கம். கட்சியெல்லாம் தொடங்கும் எண்ணமில்லை. பின்னால் அதுகுறித்து யோசிப்போம். சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில்தான் தற்போது நான் களத்தில் இறங்கியுள்ளேன். எனக்கு தெலுங்கு அமைப்புகள் இத்தனை முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று நினைக்கவில்லை.
கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் கிடையாது. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நான் இப்போதே கூற முடியாது. தெலுங்கு சாதிகளுக்கு மட்டுமன்றி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியினருக்கும் சேவை புரிய வேண்டும் என்பதுதான் என் நோக்கம். ஆந்திரா ஜன்ம பூமி என்றால், தமிழ்நாடுதான் என்னோடைய கர்ம பூமி" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகர் விஜய்யை அச்சுறுத்தவே வருமான வரி சோதனை - சீமான் குற்றச்சாட்டு