ETV Bharat / state

ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி: தீபம் ஏற்றிய அதிமுக தொண்டர்கள்!

author img

By

Published : Dec 5, 2020, 7:40 PM IST

Updated : Dec 6, 2020, 7:08 PM IST

தருமபுரி: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஒசூரில் அதிமுகவினர் வீட்டுக்கு வெளியே தீபம் ஏற்றினர்.

தீபம் ஏற்றிய அதிமுக ஆதரவாளர்கள்!
தீபம் ஏற்றிய அதிமுக ஆதரவாளர்கள்!

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக தலைவர்கள் ஆங்காங்கே அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

தீபம் ஏற்றிய அதிமுக ஆதரவாளர்கள்!

அந்த வகையில், தருமபுரி மாவட்டம் ஒசூரில் அதிமுகவினர் வீட்டுக்கு வெளியே தீபம் ஏற்றி அனுசரித்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக இணை செயலாளர் மஞ்சுளா தனது வீட்டிற்கு வெளியே தீபம் ஏற்றினார்.

அதைப் போல ஓசூர் பகுதியில் உள்ள அதிமுகவினர் ஏராளமானோர் தங்கள் வீட்டு வாசலில் தீபம் ஏற்றினர்.

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக தலைவர்கள் ஆங்காங்கே அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

தீபம் ஏற்றிய அதிமுக ஆதரவாளர்கள்!

அந்த வகையில், தருமபுரி மாவட்டம் ஒசூரில் அதிமுகவினர் வீட்டுக்கு வெளியே தீபம் ஏற்றி அனுசரித்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக இணை செயலாளர் மஞ்சுளா தனது வீட்டிற்கு வெளியே தீபம் ஏற்றினார்.

அதைப் போல ஓசூர் பகுதியில் உள்ள அதிமுகவினர் ஏராளமானோர் தங்கள் வீட்டு வாசலில் தீபம் ஏற்றினர்.

Last Updated : Dec 6, 2020, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.