ETV Bharat / state

புனித தெரசாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

author img

By

Published : Oct 9, 2020, 11:40 AM IST

கரூர்: தெரசாள் ஆலயத்தின் 90ஆவது திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

Karuur Theresa Church festival
Karuur Theresa Church festival

கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புனித தெரசாள் ஆலயத்தில் 90ஆவது திருவிழா இன்று பங்குத்தந்தை ஜெபஸ்டின் தலைமையில் நடைபெற்றது.

இத்திருவிழா கொடியேற்றத்தை வேலாயுதம்பாளையம் அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை லாசர் சுந்தரராஜ் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இன்றிலிருந்து வரும் பத்து நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் காலை 6 மணிக்கு கூட்டுத் திருப்பலி நடைபெறும் என ஆலயம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் தேர்பவனி இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திருவிழாவில் திருப்பலியில் கலந்துகொள்ள முதியோருக்கும் குழந்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புனித தெரசாள் ஆலயத்தில் 90ஆவது திருவிழா இன்று பங்குத்தந்தை ஜெபஸ்டின் தலைமையில் நடைபெற்றது.

இத்திருவிழா கொடியேற்றத்தை வேலாயுதம்பாளையம் அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை லாசர் சுந்தரராஜ் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இன்றிலிருந்து வரும் பத்து நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் காலை 6 மணிக்கு கூட்டுத் திருப்பலி நடைபெறும் என ஆலயம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் தேர்பவனி இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திருவிழாவில் திருப்பலியில் கலந்துகொள்ள முதியோருக்கும் குழந்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.