ETV Bharat / state

கரூர் இரட்டை கொலை வழக்கு: அண்ணன், தம்பிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

சொத்து தகராறில் கணவன், மனைவி என இருவரையும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

author img

By

Published : Jul 12, 2023, 10:30 PM IST

touble murder case
இரட்டை கொலை வழக்கு

கரூர்: வெள்ளியணை ஊராட்சி மணவாடி கிராமம் அய்யம்பாளையம் பகுதியில் வசித்து வந்த தங்கராஜ். இவர் மகன் ரங்கநாதன் என்பவருக்கும் கரூர் ராயனூர் தில்லை நகரில் வசித்து வந்த தேவராஜ் குடும்பத்திற்கும் இடையே தில்லை நகரில் உள்ள நிலம் ஒன்றைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக வாய்த் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் சொத்தை இரண்டாகப் பிரிக்க முடியாது என தேவராஜின் மகன்கள் பார்த்திபன், கௌதம், பிரவீன் ஆகிய மூவரும் மணவாடி ரெங்கநாதனை மிரட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி இரவு வெள்ளியணை அருகே உள்ள மணவாடி கிராமத்தில் ரங்கநாதன் வீட்டில் இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது, ரெங்கநாதன் வீட்டுக்குள் அரிவாளுடன் தேவராஜ் மகன்கள் மூவர் ரெங்க நாதனை சரமாரியாக வெட்டி சாய்தனர். அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த ரெங்கநாதனின் மனைவி தீபிகாவை மூவரும் கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

இந்த இரட்டை கொலை வழக்கு சம்பந்தமாக வெள்ளியணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட ரங்கநாதனின் தந்தை தங்கராஜ் உடன் பிறந்தவரான தேவராஜின் மகன்கள் ராயனூர் தில்லை நகரைச் சேர்ந்த பார்த்திபன்(28) மற்றும் கௌதம் என்கிற விக்னேஷ்(28) ஆகிய இருவரைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதில் தேவராஜின் மூன்றாவது மகன் பிரவீன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமலிருந்து வந்தார். இது தொடர்பாகத் தனி வழக்கு ஒன்று கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இரட்டை கொலை வழக்கு சம்பந்தமாகக் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று (ஜூலை12) இரண்டு எதிரிகளின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தேவராஜின் மகன்கள் பார்த்திபன்(29) கௌதம் என்கிற விக்னேஷ் (28) ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 31,000 அபராதம் விதித்தது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு மெய்க்காவல் சிறைத் தண்டனையும் விதித்து கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பு வழங்கினார்.

இதனையடுத்து குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் சிறப்பாகப் புலன் விசாரணை செய்த பசுபதிபாளையம் சர்க்கிள் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் உள்ளிட்ட காவலர்களைக் கரூர் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:GSTN-ஐ அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரக்கூடாது: தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் அறிக்கை!

கரூர்: வெள்ளியணை ஊராட்சி மணவாடி கிராமம் அய்யம்பாளையம் பகுதியில் வசித்து வந்த தங்கராஜ். இவர் மகன் ரங்கநாதன் என்பவருக்கும் கரூர் ராயனூர் தில்லை நகரில் வசித்து வந்த தேவராஜ் குடும்பத்திற்கும் இடையே தில்லை நகரில் உள்ள நிலம் ஒன்றைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக வாய்த் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் சொத்தை இரண்டாகப் பிரிக்க முடியாது என தேவராஜின் மகன்கள் பார்த்திபன், கௌதம், பிரவீன் ஆகிய மூவரும் மணவாடி ரெங்கநாதனை மிரட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி இரவு வெள்ளியணை அருகே உள்ள மணவாடி கிராமத்தில் ரங்கநாதன் வீட்டில் இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது, ரெங்கநாதன் வீட்டுக்குள் அரிவாளுடன் தேவராஜ் மகன்கள் மூவர் ரெங்க நாதனை சரமாரியாக வெட்டி சாய்தனர். அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த ரெங்கநாதனின் மனைவி தீபிகாவை மூவரும் கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

இந்த இரட்டை கொலை வழக்கு சம்பந்தமாக வெள்ளியணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட ரங்கநாதனின் தந்தை தங்கராஜ் உடன் பிறந்தவரான தேவராஜின் மகன்கள் ராயனூர் தில்லை நகரைச் சேர்ந்த பார்த்திபன்(28) மற்றும் கௌதம் என்கிற விக்னேஷ்(28) ஆகிய இருவரைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதில் தேவராஜின் மூன்றாவது மகன் பிரவீன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமலிருந்து வந்தார். இது தொடர்பாகத் தனி வழக்கு ஒன்று கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இரட்டை கொலை வழக்கு சம்பந்தமாகக் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று (ஜூலை12) இரண்டு எதிரிகளின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தேவராஜின் மகன்கள் பார்த்திபன்(29) கௌதம் என்கிற விக்னேஷ் (28) ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 31,000 அபராதம் விதித்தது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு மெய்க்காவல் சிறைத் தண்டனையும் விதித்து கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பு வழங்கினார்.

இதனையடுத்து குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில் சிறப்பாகப் புலன் விசாரணை செய்த பசுபதிபாளையம் சர்க்கிள் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் உள்ளிட்ட காவலர்களைக் கரூர் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:GSTN-ஐ அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரக்கூடாது: தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர் அறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.