ETV Bharat / state

திருவனந்தபுரத்தில் டூ நெல்லை: ரயில் சேவையை நீட்டிக்க கோரிக்கை!

author img

By

Published : Jun 13, 2019, 5:34 PM IST

நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருவுக்கு இயக்கப்படும் ரயில்களில் ஒன்றை குமரி முதல் நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை வரை ரயில் சேவை நீடிக்க கோரிக்கை!

இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து கேரள மாநிலத்திலுள்ள சோரனூர், காசர்கோடு, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் வேலை பார்த்துவருகின்றனர்.

இவர்கள் நெல்லை, கன்னியாகுமரியில் இருந்து தினம்தோறும் வாரம் ஒரு முறையும் தாங்கள் வேலை செய்யும் திருவனந்தபுரம் மாநிலத்திற்குச் சென்று வருகின்றனர். ஆனால் நெல்லை, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்திற்கு போதுமான இரவு நேர ரயில்கள் இல்லை.

இதனால் சாலை வழியாக பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேருந்துகள் ஏறி திருவனந்தபுரத்திற்கு செல்லும் அவல நிலையில் உள்ளனர்.

அதே நேரத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருவுக்கு ஐந்து இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த ரயில்களில் ஏதாவது ஒரு ரயிலை நாகர்கோவில்-நெல்லை வரை நீட்டித்து இயக்க வேண்டும்.

திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை வரை ரயில் இயக்கக் கோரிக்கை
இதன் மூலம் திருவனந்தபுரம் மாநிலத்தில் வேலை பார்க்கும் நெல்லை, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் மிகவும் பயன் அடைவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து கேரள மாநிலத்திலுள்ள சோரனூர், காசர்கோடு, கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் வேலை பார்த்துவருகின்றனர்.

இவர்கள் நெல்லை, கன்னியாகுமரியில் இருந்து தினம்தோறும் வாரம் ஒரு முறையும் தாங்கள் வேலை செய்யும் திருவனந்தபுரம் மாநிலத்திற்குச் சென்று வருகின்றனர். ஆனால் நெல்லை, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்திற்கு போதுமான இரவு நேர ரயில்கள் இல்லை.

இதனால் சாலை வழியாக பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேருந்துகள் ஏறி திருவனந்தபுரத்திற்கு செல்லும் அவல நிலையில் உள்ளனர்.

அதே நேரத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருவுக்கு ஐந்து இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த ரயில்களில் ஏதாவது ஒரு ரயிலை நாகர்கோவில்-நெல்லை வரை நீட்டித்து இயக்க வேண்டும்.

திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை வரை ரயில் இயக்கக் கோரிக்கை
இதன் மூலம் திருவனந்தபுரம் மாநிலத்தில் வேலை பார்க்கும் நெல்லை, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் மிகவும் பயன் அடைவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Intro:கன்னியாகுமரி: திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருக்கு இயக்கப்படும் ரயில்களில் ஒன்றை, குமரி மற்றும் நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


Body:குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திலுள்ள சோரனூர், காசர்கோடு கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் இருந்து தினம்தோறும், வாரம் ஒரு முறையும் தாங்கள் வேலை செய்யும் திருவனந்தபுரம் மாநிலத்திற்கு சென்று வருகின்றனர். ஆனால் நெல்லை நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்திற்கு போதுமான இரவுநேர ரயில்கள் இல்லை.
இதனால் சாலை வழியாக பேருந்துகளில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இரண்டு பேருந்துகள் ஏறி திருவனந்தபுரத்திற்கு செல்லும் அவல நிலையில் உள்ளனர்.
அதே நேரத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருக்கு 5 இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த ரயில்களில் ஏதாவது ஒரு ரயிலை நாகர்கோவில், நெல்லை வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
இதன் மூலம் திருவனந்தபுரம் மாநிலத்தில் வேலை பார்க்கும் நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் மிகவும் பயன் அடைவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.