ETV Bharat / state

குமரியில் கனமழை: ஆற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்பு! - got rescued

கன்னியாகுமரி: திடீர் மழை காரணமாக கீரிப்பாறை, காளிகேசம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள், ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோரை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள் மீட்பு
author img

By

Published : Jul 10, 2019, 7:31 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் பாலமோர், மாராமலை உள்ளிட்ட பல்வேறு மலை பகுதிகளில் இருந்து திடீரென காட்டாற்று வெள்ளம் வந்ததால் கீரிப்பாறை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாப்பத்து பாலம் மூழ்கியது.

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்பு

இந்நிலையில், காளிகேசத்திற்கு இன்று காலை ரப்பர் பால் எடுப்பதற்காகச் சென்ற ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், அருவியில் குளிக்கச் சென்ற சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் ஆற்றை கடக்க முடியாமல் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்குச் சென்ற நாகர்கோவில் தீயணைப்பு துறையினர் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காளிகேசம் அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் பாலமோர், மாராமலை உள்ளிட்ட பல்வேறு மலை பகுதிகளில் இருந்து திடீரென காட்டாற்று வெள்ளம் வந்ததால் கீரிப்பாறை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாப்பத்து பாலம் மூழ்கியது.

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்பு

இந்நிலையில், காளிகேசத்திற்கு இன்று காலை ரப்பர் பால் எடுப்பதற்காகச் சென்ற ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், அருவியில் குளிக்கச் சென்ற சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் ஆற்றை கடக்க முடியாமல் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்குச் சென்ற நாகர்கோவில் தீயணைப்பு துறையினர் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காளிகேசம் அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் திடீர் மழை. கீரிப்பாறை, காளிகேசம் ஆற்றில் தீடீர் வெள்ளப்பெருக்கு. ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் மற்றும் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மீட்பு. முன்னெச்சரிக்கை காரணமாக சுற்றுலா பயணிகள் காளிகேசம் செல்ல வனத்துறை தடை.Body:TN_KNK_03_09_FORESTS_BAN_SCRIPT_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் திடீர் மழை. கீரிப்பாறை, காளிகேசம் ஆற்றில் தீடீர் வெள்ளப்பெருக்கு. ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் மற்றும் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மீட்பு. முன்னெச்சரிக்கை காரணமாக சுற்றுலா பயணிகள் காளிகேசம் செல்ல வனத்துறை தடை.

கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மலைகளில் இருந்து தண்ணீர் ஊற்று மழை நீர் பெருக்கெடுத்து ஆறுகளில் கலந்து வருகிறது. இந்த தண்ணீர் பேச்சிப்பாறை , பெருஞ்சாணி அணைகளுக்கு செல்கிறது. பாலமோர், மாராமலை உள்ளிட்ட பல்வேறு மலை பகுதிகளில் இருந்து திடீரென காட்டாற்று வெள்ளம் வந்ததால் கீர்ப்பாறை ஆற்றில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டு சாப்பத்து பாலம் மூழ்கியது. காளிகேசத்திற்கு இன்று காலை ரப்பர் பால் எடுபதற்காக சென்ற ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், வனத்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றை கடந்து வர முடியாமல் சிக்கி தவித்தனர். சிக்கி தவித்த அனைவரையும் வனத்துறையினர் மீட்டனர். தகவல் அறிந்ததும் நாகர்கோவிலில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சுற்றுலா பயணிகள் காளிகேசம் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.