ETV Bharat / state

பதறவைக்கும் சிசிடிவி... அரிவாளால் வெட்ட வந்த ரவுடி.. அலறியடித்து தப்பிய பேராசிரியை...

author img

By

Published : Jun 25, 2022, 2:53 PM IST

தன்னை அரிவாளால் தாக்க வரும் ரவுடியை பார்த்து சுதாரித்துக் கொண்ட பேராசிரியை, தப்பியோடிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அரிவாளால் வெட்ட வந்த ரவுடி.. அலறியடித்து தப்பிய ஆசிரியை - பதறவைக்கும் சிசிடிவி வீடியோ!
அரிவாளால் வெட்ட வந்த ரவுடி.. அலறியடித்து தப்பிய ஆசிரியை - பதறவைக்கும் சிசிடிவி வீடியோ!

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் அஜிதா - சுபாஷ் தம்பதி பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். கல்லூரி முடிந்த பின்பு இருவரும் மாணவர்களுக்கு வீட்டில் டியூஷன் வகுப்புகள் நடத்திவருகின்றனர். இந்த நிலையில், நேற்று (ஜூன் 24) வழக்கம் போல் டியூஷன் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது, அஜிதா வீட்டின் வெளியே செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அரிவாளால் வெட்ட வந்த ரவுடி..

அப்போது அதே தெருவைச் சேர்ந்த அஜித் என்ற ரவுடி, தன் கையில் வைத்திருந்த அரிவாளால் அஜிதாவை தாக்கவரும் பாணியில் நெருங்கி வந்துள்ளார். இதனை சுதாரித்துக் கொண்ட அஜிதா, அலறியடித்து வீட்டிற்குள் ஓடியுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையில், இதுதொடர்பாக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் அஜிதா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளி அஜித்தை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பேருந்திற்காக காத்திருந்தவரிடம் பணம் பறிப்பு - ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச்சென்ற பெண்ணிற்கு போலீஸ் வலை!

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் அஜிதா - சுபாஷ் தம்பதி பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். கல்லூரி முடிந்த பின்பு இருவரும் மாணவர்களுக்கு வீட்டில் டியூஷன் வகுப்புகள் நடத்திவருகின்றனர். இந்த நிலையில், நேற்று (ஜூன் 24) வழக்கம் போல் டியூஷன் வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது, அஜிதா வீட்டின் வெளியே செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அரிவாளால் வெட்ட வந்த ரவுடி..

அப்போது அதே தெருவைச் சேர்ந்த அஜித் என்ற ரவுடி, தன் கையில் வைத்திருந்த அரிவாளால் அஜிதாவை தாக்கவரும் பாணியில் நெருங்கி வந்துள்ளார். இதனை சுதாரித்துக் கொண்ட அஜிதா, அலறியடித்து வீட்டிற்குள் ஓடியுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையில், இதுதொடர்பாக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் அஜிதா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளி அஜித்தை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பேருந்திற்காக காத்திருந்தவரிடம் பணம் பறிப்பு - ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச்சென்ற பெண்ணிற்கு போலீஸ் வலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.