ETV Bharat / state

தோவாளை முத்தாரம்மன் கோயிலில் பூ அலங்காரப் போட்டி! - கன்னியாகுமரி

கன்னியாகுமரி: தோவாளை முத்தாரம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பூ கட்டும் கலைஞர்கள் நடத்திய பூ அலங்காரப் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தோவாளை முத்தாரம்மன் கோவிலில் பூ அலங்காரப் போட்டி!
author img

By

Published : Apr 25, 2019, 8:27 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பூ கட்டும் கலைஞர்கள் நடத்திய பூ அலங்காரப் போட்டி, அங்குக் கூடி நின்ற பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சுமார் 20ஆயிரம் கிலோவில் வித விதமான பூக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்த பூ அலங்காரத்தைக் காண குமரி, நெல்லை, கேரளா ஆகிய இடங்களிலிருந்து பக்தர்கள் திரளாக வருகை தந்தனர்.

புகழ் பெற்ற மலர்ச் சந்தையாகத் திகழ்ந்துவரும் தோவாளை மலர் சந்தையிலிருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் டன் கணக்கில் பூக்கள் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பூ கட்டும் கலைஞர்கள் நடத்திய பூ அலங்காரப் போட்டி, அங்குக் கூடி நின்ற பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சுமார் 20ஆயிரம் கிலோவில் வித விதமான பூக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்த பூ அலங்காரத்தைக் காண குமரி, நெல்லை, கேரளா ஆகிய இடங்களிலிருந்து பக்தர்கள் திரளாக வருகை தந்தனர்.

புகழ் பெற்ற மலர்ச் சந்தையாகத் திகழ்ந்துவரும் தோவாளை மலர் சந்தையிலிருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் டன் கணக்கில் பூக்கள் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TN_KNK_03_24_MUTHARAMAN KOVIL_THIRUVILA_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பூ கட்டும் கலைஞர்கள் நடத்திய போட்டி பூ அலங்காரம் அங்கு கூடி நின்ற பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது, சுமார் இருபதாயிரம் கிலோ கொண்ட வித விதமான பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருந்த பூ அலங்காரத்தை காண குமரி, நெல்லை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்தனர். புகழ் பெற்ற மலர் சந்தையாக திகழ்கிறது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவிற்கு இந்த மலர் சந்தையில் இருந்துதான் டன் கணக்கில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது, இதனிடையே இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் திருவிழாவின் போது பூ விற்பனையாளர்கள் மற்றும் பூ கட்டும் கலைஞர்கள் இணைந்து போட்டி போட்டு பூ அலங்காரம் செய்வது வழக்கம், அதன் படி முத்தாரம்மன் கோவிலில் இந்த வருடத்திற்கான திருவிழா இன்று தொடங்கியது, இதனை தொடர்ந்து தோவாளை பூ விற்பனையாளர்கள் மற்றும் பூ கட்டும் கலைஞர்கள் இணைந்து போட்டி பூ அலங்காரம் நடத்தினர், தேர் மாலை, தோரண மாலை என இருபதாயிரம் கிலோ எடை கொண்ட பூக்கள் மூலம் நடத்தப்பட்ட பூ அலங்காரம் அங்கு கூடி நின்ற பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது என்பதால் இதனை கண்டு ரசிக்க குமரி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்து ஏராளமானோர் வருகை தந்தனர்,
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.