ETV Bharat / state

குமரி காந்தி மண்டபம் முன்பு உள்ள மின் கேபிள் ரீல்களை அகற்ற கோரிக்கை - Request to remove electrical cable reels

குமரி: காந்தி மண்டபம் முன்பு சுற்றுலாப்பயணிகள் நடந்து செல்வதற்கு இடையூறாக உள்ள மின் கேபிள் ரீல்களை அகற்ற மாவட்ட நிர்வாத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காந்தி மண்டபம் முன்பு உள்ள மின் கேபிள் ரீல்கள்
காந்தி மண்டபம் முன்பு உள்ள மின் கேபிள் ரீல்கள்
author img

By

Published : Dec 1, 2019, 11:54 AM IST

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு, வெளிநாட்டிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப சுவாமி சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கன்னியாகுமரிக்கு வருகின்றனர்.

கடற்கரைச்சாலை பகுதியிலிருந்து கடலின் அழகை சுற்றுலாப்பயணிகள் ரசிக்க, சாலையோரக் கடைகள், தள்ளுவண்டிகள் ஆகியவற்றை நிறுத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் கெடுபிடி காட்டி வருகிறது.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குவியும் இடமான காந்தி மண்டபம் பகுதியில் தரைக்குக் கீழ் பதிக்கும் மின் கேபிள்களுக்கான ஏராளமான ரீல்களை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மின்வாரிய பணியாளர்கள் கொண்டு வந்தனர்.

அதன் பின் அங்கு எந்த விதமான பணிகளும் நடைபெறவில்லை. இது சுற்றுலாப்பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக உள்ளது.

காந்தி மண்டபம் முன்பு உள்ள மின் கேபிள் ரீல்கள்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, 'கன்னியாகுமரியை அழகுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இந்த மின் வயர் ரீல்களை மிகவும் முக்கியமான பகுதியான காந்தி மண்டபம் முன்பு கொண்டு வந்து போட்டுள்ளனர். மாவட்ட அலுவலர்கள் உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும் அல்லது அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு பணி செய்யும்போது திரும்ப கொண்டு வரவேண்டும். தேவையில்லாமல் இங்கு இடையூறாகக் கொண்டு போடப்பட்டுள்ளதால், பக்தர்கள் நடந்து செல்லக்கூட முடியாமல் உள்ளது' என்றார்.

இதையும் படிங்க: ஒகேனக்கல் விஐபி வழி - மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை!

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு, வெளிநாட்டிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப சுவாமி சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கன்னியாகுமரிக்கு வருகின்றனர்.

கடற்கரைச்சாலை பகுதியிலிருந்து கடலின் அழகை சுற்றுலாப்பயணிகள் ரசிக்க, சாலையோரக் கடைகள், தள்ளுவண்டிகள் ஆகியவற்றை நிறுத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் கெடுபிடி காட்டி வருகிறது.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குவியும் இடமான காந்தி மண்டபம் பகுதியில் தரைக்குக் கீழ் பதிக்கும் மின் கேபிள்களுக்கான ஏராளமான ரீல்களை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மின்வாரிய பணியாளர்கள் கொண்டு வந்தனர்.

அதன் பின் அங்கு எந்த விதமான பணிகளும் நடைபெறவில்லை. இது சுற்றுலாப்பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக உள்ளது.

காந்தி மண்டபம் முன்பு உள்ள மின் கேபிள் ரீல்கள்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, 'கன்னியாகுமரியை அழகுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இந்த மின் வயர் ரீல்களை மிகவும் முக்கியமான பகுதியான காந்தி மண்டபம் முன்பு கொண்டு வந்து போட்டுள்ளனர். மாவட்ட அலுவலர்கள் உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும் அல்லது அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு பணி செய்யும்போது திரும்ப கொண்டு வரவேண்டும். தேவையில்லாமல் இங்கு இடையூறாகக் கொண்டு போடப்பட்டுள்ளதால், பக்தர்கள் நடந்து செல்லக்கூட முடியாமல் உள்ளது' என்றார்.

இதையும் படிங்க: ஒகேனக்கல் விஐபி வழி - மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை!

Intro:காந்தி மண்டபம் முன்பு சுற்றுலாப்பயணிகள் நடந்து செல்வதற்கு இடைஞ்சலாக உள்ள மின் கேபிள் ரீல்களை அங்கிருந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Body:tn_knk_04_tourist_disturbance_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

காந்தி மண்டபம் முன்பு சுற்றுலாப்பயணிகள் நடந்து செல்வதற்கு இடைஞ்சலாக உள்ள மின் கேபிள் ரீல்களை அங்கிருந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப சுவாமிகளின் சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரைச்சாலை பகுதியிலிருந்து கடலின் அழகை சுற்றுலாப்பயணிகள் ரசிக்க கடற்கரை பகுதிகளில் கடைகள் மற்றும் தள்ளுவண்டிகளை நிறுத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் கெடுபிடி காட்டி வருகிறது. அந்த பகுதியில் இருந்த கடைகளும் தள்ளுவண்டிகளையும் அதிகாரிகள் அதிரடியாக அங்கிருந்து அகற்றினர். மேலும் கன்னியாகுமரி பகுதியில் எல்லா வருடமும் 500க்கும் மேற்பட்ட கடைகள் ஏலம் விடப்படும். ஆனால் இந்த வருடம் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சுமார் 250 கடைகள் மட்டும் ஏலம் விடப்பட்டது. இந்நிலையில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக குவியும் இடமான காந்திமண்டபம் பகுதியில் தரைக்கு கீழ் பதிக்கும் மின் கேபிள்களுக்கான ஏராளமான ரீல்களை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மின்வாரிய பணியாளர்கள் கொண்டு போட்டனர். அதன் பின் அங்கு எந்தவிதமான பணிகளும் நடைபெறவில்லை. இந்த ரீல்கள் போட்ட இடத்திலேயே போட்டபடி கிடக்கிறது. இது காந்தி மண்டபம் முன்பு ரோட்டிலும் நடைபாதையிலும் போடப்படுவதால் சுற்றுலாப்பயணிகளும் பக்தர்களும் நடந்து செல்ல முடியாமல் இடைஞ்சலாக உள்ளது. இதுகுறித்து அந்த பகுதியிலுள்ள சமூக ஆர்வலர்கள் கூறும்போது கன்னியாகுமரியை அழகுபடுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இந்த மின் ஒயர் ரீல்களை மிகவும் முக்கியமான பகுதியான காந்தி மண்டபம் முன்பு கொண்டு போட்டுள்ளனர். உடனடியாக பணிகளை துவங்க வேண்டும் அல்லது அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு பணி செய்யும்போது அங்கு கொண்டு வரவேண்டும் தேவையில்லாமல் இங்கு இடைஞ்சலாக கொண்டு போடப்பட்டுள்ளதால் பக்தர்கள் நடந்து செல்லக்கூட முடியாமல் உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனடியான நடவடிக்கை எடுத்து இந்த சீசன் காலம் வரையாவது அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
பேட்டி சுபாஷ்(சமூக ஆர்வலர்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.