ETV Bharat / state

வில்லிசை பாடி அரசுக்கு கோரிக்கை விடுத்த நாட்டுப்புற கலைஞர்கள்

author img

By

Published : Apr 17, 2020, 3:32 PM IST

கன்னியாகுமரி: தேசிய ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Folk artist

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோயில் திருவிழாக்கள் அதிக அளவில் நடைபெறும். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து திருவிழாக்களும் தடைப்பட்டுள்ளன. திருவிழாக்களுக்கு என்று ஏற்கனவே முன்பதிவு செய்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கை

இதனால், இந்த திருவிழாக்களை நம்பி இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.1000 உதவித் தொகையை அதிகரித்து தர வேண்டும். மேலும், வங்கி மூலமாக வட்டி இல்லா கடனாக ரூ. 20,000 தந்து உதவ வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை முத்தாரம்மன் கோயில் முன்பு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பாடலை வில்லிசையில் பாடி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோயில் திருவிழாக்கள் அதிக அளவில் நடைபெறும். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து திருவிழாக்களும் தடைப்பட்டுள்ளன. திருவிழாக்களுக்கு என்று ஏற்கனவே முன்பதிவு செய்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கை

இதனால், இந்த திருவிழாக்களை நம்பி இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ.1000 உதவித் தொகையை அதிகரித்து தர வேண்டும். மேலும், வங்கி மூலமாக வட்டி இல்லா கடனாக ரூ. 20,000 தந்து உதவ வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை முத்தாரம்மன் கோயில் முன்பு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பாடலை வில்லிசையில் பாடி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.