ETV Bharat / state

தனுஷ்கொடியில் கடல் சீற்றம் - ரயில் சேவை பாதிப்பு

author img

By

Published : Jul 3, 2019, 7:58 AM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலைகள் வானுயரத்திற்கு மேல் எழுந்து, சூறைக்காற்று வீசுவதால் சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள மணல்கள் சாலையை மூடியுள்ளன.

இதனால், பாம்பன் மற்றும் மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத் தடை விதித்து மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

ராமேஸ்வரம் பகுதி முழுவதும் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால், பாம்பன் பாலத்தை ரயில்கள் கடப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலைகள் வானுயரத்திற்கு மேல் எழுந்து, சூறைக்காற்று வீசுவதால் சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள மணல்கள் சாலையை மூடியுள்ளன.

இதனால், பாம்பன் மற்றும் மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத் தடை விதித்து மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

ராமேஸ்வரம் பகுதி முழுவதும் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால், பாம்பன் பாலத்தை ரயில்கள் கடப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

Intro:இராமநாதபுரம்
ஜீலை 02.
இராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் இரயில் போக்குவரத்து பாதிப்பு, பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. Body:இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஸ்கோடி தென்கடல் பகுதி கடந்த சில நாட்களாக அமைதியான நிலையில் இருந்தகடல் இன்று காற்றின் வேகம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் தனுஷ்கோடி போர்ட் பகுதியை முட்டி அலைகள் வான் உயரத்திற்கு மேல் எழுகின்றது. மேலும் சூறைக்காற்று வீசுவதால் சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள மணல்கள் சாலை முழுவதும் மூடி காணப்படுகின்றது.

கடல் சீற்றம் காரணமாக தனுஸ்கோடி நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் படகை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் பாம்பன் மற்றும் மண்டபம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர், இதனால் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைத்துள்ளன.

இராமேஸ்வரம் தீவு முழுவதும் காற்றின் வேகமாக அதிகமாக காணப்படுவதால் பாம்பன் பாலத்தை இரயில்கள் கடப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.