ETV Bharat / state

கரோனா 3ஆவது அலை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை

author img

By

Published : Jul 7, 2021, 7:49 AM IST

Updated : Jul 7, 2021, 9:04 AM IST

கரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமரியில் கரோனா 3ஆவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
குமரியில் கரோனா 3ஆவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கன்னியாகுமரி : இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் அரவிந்த் கூறியதாவது, " கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையின்போது நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குத் தொற்று ஏற்பட்டது. தற்போது ஒரு நாள் பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்து வருகிறது. காவல்துறையினர், பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிந்தும், தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படுவதால், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரோனா 3ஆவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம்

ஒன்றிய அரசின் நாகாய் திட்டத்தின் கீழ் நிமிடத்திற்கு 100 லிட்டர் ஆக்ஸிஜன் தயார் செய்யக் கூடிய அளவிலான யூனிட் இன்னும் இரு தினங்களில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் கட்டும் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது" என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரேநாளில் 3,479 பேருக்கு கரோனா உறுதி

கன்னியாகுமரி : இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் அரவிந்த் கூறியதாவது, " கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையின்போது நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குத் தொற்று ஏற்பட்டது. தற்போது ஒரு நாள் பாதிப்பு 50-க்கும் கீழ் குறைந்து வருகிறது. காவல்துறையினர், பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக இரண்டாம் அலை கட்டுப்படுத்தப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பொதுமக்கள் முகக்கவசங்கள் அணிந்தும், தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படுவதால், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரோனா 3ஆவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம்

ஒன்றிய அரசின் நாகாய் திட்டத்தின் கீழ் நிமிடத்திற்கு 100 லிட்டர் ஆக்ஸிஜன் தயார் செய்யக் கூடிய அளவிலான யூனிட் இன்னும் இரு தினங்களில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் கட்டும் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளது" என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரேநாளில் 3,479 பேருக்கு கரோனா உறுதி

Last Updated : Jul 7, 2021, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.