ETV Bharat / state

காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் கடத்தல் - வெளியான சிசிடிவி காட்சிகள்!

Kanyakumari: காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைத்திருந்த காரின் லாக்கை உடைத்து, காரைக் கடத்திய மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 3:45 PM IST

car-theft-front-of-the-police-station-in-kanyakumari
காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைத்த கார் கடத்தல்... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் கடத்தல்

கன்னியாகுமரி: நாகர்கோவில் கோட்டார் சுமைதாங்கி தெருவைச் சேர்ந்தவர், செந்தில்குமார். இவர் கடந்த 24-ஆம் தேதி மாலையில் வைத்தியநாதபுரம் முத்தாரம்மன் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் வந்த செந்தில் குமாருக்கு கால் முறிந்து உள்ளது. இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, செந்தில்குமார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காரை தேடி வந்தனர். இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய அந்த காரை இன்று கோட்டாறு பகுதியில் நிற்பதை செந்தில்குமாரின் உறவினர்கள் பார்த்து உள்ளனர்.

இந்த தகவலின் அடிப்படையில் கோட்டாறு போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார், அந்த காரை காவல் நிலையம் முன்பு கொண்டு வந்து நிறுத்தி, காரை யாரும் எடுக்க முடியாதபடி, முன் சக்கரம் மற்றும் பின் சக்கரங்களை வீல் லாக் போட்டு பூட்டி உள்ளனர். பின்னர் காரின் பதிவு எண் மூலம் உரிமையாளரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே வீல் லாக் போட்டு பூட்டி இருந்த அந்த கார், திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அதில் 2 மர்ம நபர்கள் அங்கு வந்து, கார் சக்கரத்தில் போட்டிருந்த பூட்டை கல்லால் உடைத்து விட்டு காரை எடுத்துச் சென்றது பதிவாகி இருந்தது.

மேலும், அதில் மர்ம நபர்களின் உருவம் தெளிவாக தெரிகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து காரைத் திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரு லட்டு ஒரு கோடிப்பே! விநாயகர் விசர்ஜனம் வெகு சிறப்பு - ரூ.1.20 கோடிக்கு ஏலம் போன லட்டு!

காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் கடத்தல்

கன்னியாகுமரி: நாகர்கோவில் கோட்டார் சுமைதாங்கி தெருவைச் சேர்ந்தவர், செந்தில்குமார். இவர் கடந்த 24-ஆம் தேதி மாலையில் வைத்தியநாதபுரம் முத்தாரம்மன் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் வந்த செந்தில் குமாருக்கு கால் முறிந்து உள்ளது. இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, செந்தில்குமார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காரை தேடி வந்தனர். இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய அந்த காரை இன்று கோட்டாறு பகுதியில் நிற்பதை செந்தில்குமாரின் உறவினர்கள் பார்த்து உள்ளனர்.

இந்த தகவலின் அடிப்படையில் கோட்டாறு போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார், அந்த காரை காவல் நிலையம் முன்பு கொண்டு வந்து நிறுத்தி, காரை யாரும் எடுக்க முடியாதபடி, முன் சக்கரம் மற்றும் பின் சக்கரங்களை வீல் லாக் போட்டு பூட்டி உள்ளனர். பின்னர் காரின் பதிவு எண் மூலம் உரிமையாளரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே வீல் லாக் போட்டு பூட்டி இருந்த அந்த கார், திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அதில் 2 மர்ம நபர்கள் அங்கு வந்து, கார் சக்கரத்தில் போட்டிருந்த பூட்டை கல்லால் உடைத்து விட்டு காரை எடுத்துச் சென்றது பதிவாகி இருந்தது.

மேலும், அதில் மர்ம நபர்களின் உருவம் தெளிவாக தெரிகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து காரைத் திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரு லட்டு ஒரு கோடிப்பே! விநாயகர் விசர்ஜனம் வெகு சிறப்பு - ரூ.1.20 கோடிக்கு ஏலம் போன லட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.