ETV Bharat / state

மும்பைக்கு கடத்த முயன்ற ரூ. 2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்

author img

By

Published : Jul 22, 2022, 4:26 PM IST

நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் மும்பைக்கு கடத்த இருந்த சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ திமிங்கல எச்சத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்
ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்

கன்னியாகுமரி: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து திமிங்கில எச்சம் ரயில் மூலம் மும்பைக்கு கடத்த இருப்பதாக மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்த ரயிலை வனத்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தடிக்காரன்கோணம் அருகே தோமையார்புரத்தை சேர்ந்த தினகரன் லாசர் (36) என்பது தெரியவந்தது. அவரை சோதனை செய்ததில் அவரிடம் இரண்டு கிலோ திமிங்கல எச்சம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெருவிளையைச் சேர்ந்த அருள், மகேஷ், பார்வதிபுரத்தை சேர்ந்த திலீப் குமார், ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்த சதீஷ், தம்மத்து கோனத்தை சேர்ந்த தங்கராஜ், ஆகிய 5 பேர் உள்பட 6 பேரை கைது செய்யப்பட்டனர்.

ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்

மேலும், பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இதன் பின்னணியில் பெரிய கும்பல் ஒன்று இருப்பது தெரியவந்ததை அடுத்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இது குறித்து வனத்துறை அலுவலர் இளையராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாசனை பொருள்கள் தயாரிக்க பயன்படும் மூல பொருளான அரிய வகையை சேர்ந்த அரசால் தடை செய்யப்பட்ட திமிக்கலத்தின் இரப்பையில் சுரக்கும் சுரபிகள் இது கடலில் சென்று திமிங்கலத்தை பிடித்து எடுத்துள்ளனர்.

எந்த கடலில் சென்று எடுக்கபட்டது என விசாரணை செய்து வருகிறோம். இது அரசால் தடை செய்யபட்ட வகையாகும்” என கூறினார்.

இதையும் படிங்க: ’தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வருவேன்’ - மிரட்டிய இளைஞர் வீடியோ வைரல்

கன்னியாகுமரி: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து திமிங்கில எச்சம் ரயில் மூலம் மும்பைக்கு கடத்த இருப்பதாக மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்த ரயிலை வனத்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தடிக்காரன்கோணம் அருகே தோமையார்புரத்தை சேர்ந்த தினகரன் லாசர் (36) என்பது தெரியவந்தது. அவரை சோதனை செய்ததில் அவரிடம் இரண்டு கிலோ திமிங்கல எச்சம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெருவிளையைச் சேர்ந்த அருள், மகேஷ், பார்வதிபுரத்தை சேர்ந்த திலீப் குமார், ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்த சதீஷ், தம்மத்து கோனத்தை சேர்ந்த தங்கராஜ், ஆகிய 5 பேர் உள்பட 6 பேரை கைது செய்யப்பட்டனர்.

ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்

மேலும், பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இதன் பின்னணியில் பெரிய கும்பல் ஒன்று இருப்பது தெரியவந்ததை அடுத்து வனத்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இது குறித்து வனத்துறை அலுவலர் இளையராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “வாசனை பொருள்கள் தயாரிக்க பயன்படும் மூல பொருளான அரிய வகையை சேர்ந்த அரசால் தடை செய்யப்பட்ட திமிக்கலத்தின் இரப்பையில் சுரக்கும் சுரபிகள் இது கடலில் சென்று திமிங்கலத்தை பிடித்து எடுத்துள்ளனர்.

எந்த கடலில் சென்று எடுக்கபட்டது என விசாரணை செய்து வருகிறோம். இது அரசால் தடை செய்யபட்ட வகையாகும்” என கூறினார்.

இதையும் படிங்க: ’தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வருவேன்’ - மிரட்டிய இளைஞர் வீடியோ வைரல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.