ETV Bharat / state

"1 கோடி பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துள்ளனர்"- மாவட்ட ஆட்சியர் பொன்னையா தகவல்

காஞ்சிபுரம்: வரதராஜர் பெருமாள் கோயிலில் அத்தி வரதர் தரிசனம் நிறைவுற்ற நிலையில், இதுவரை ஒரு கோடி மக்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.

author img

By

Published : Aug 17, 2019, 12:01 AM IST

collector ponnaiah

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் வைபவம் நடைபெற்று வந்தது. ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கிய அத்தி வரதர் தரிசனம் ஜூலை 30ஆம் தேதி வரை படுத்த நிலையில் தரிசனம் அளித்தார். ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நின்ற நிலையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 47 நாட்கள் நடைபெற்ற வைபவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அத்திவரதர் காட்சியளித்தார். கடைசி நாளான வெள்ளிக்கிழமையில் அத்திவரதர் புஷ்பங்கி அலங்காரத்தில் காட்சியளித்து நிறைவு பெற்றார்.

கடைசி நாளையொட்டி பக்தர்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நின்று அத்தி வரதரை தரிசித்து சென்றனர். இந்நிலையில், அத்திவரதர் வைக்கக்கூடிய குளத்தின் பள்ளி அறையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அத்தி வரதர் தரிசனம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதுவரை ஒரு கோடி பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துள்ளனர். சனிக்கிழமை காவல்துறையின் பாதுகாப்புடன் பத்திரமாக திருக்குளத்தில் அத்தி வரதர் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், இந்த 47 நாட்களும் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர், வருவாய்த்துறையினர், ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள், காஞ்சிபுரம் மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்தி வரதர் தரிசனம் தொடக்கத்தில் ஒரு லட்சம் மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் படிப்படியாக உயர்ந்து 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை தரிசித்து சென்றனர். மக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்ததால் பதினான்காயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர் என்று தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் பொன்னையா

இதுவரை ஏறக்குறைய ஆயிரத்து 700 சுகாதாரப் பணியாளர்கள் சிறப்பாகப் பணியாற்றினார்கள், பக்தர்களுக்கு உதவ காவல் உதவி மையம், மருத்துவ சேவை, தீயணைப்புத் துறையினரின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் உள்ளிட்டவைகள் சிறப்பாக அமைக்கப்பட்டன. பொதுப்பணித்துறை பேரூராட்சி, நகராட்சித் துறை உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் பங்களிப்பு வெகு சிறப்பாக இருந்தது என அவர் கூறினார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் வைபவம் நடைபெற்று வந்தது. ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கிய அத்தி வரதர் தரிசனம் ஜூலை 30ஆம் தேதி வரை படுத்த நிலையில் தரிசனம் அளித்தார். ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நின்ற நிலையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 47 நாட்கள் நடைபெற்ற வைபவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அத்திவரதர் காட்சியளித்தார். கடைசி நாளான வெள்ளிக்கிழமையில் அத்திவரதர் புஷ்பங்கி அலங்காரத்தில் காட்சியளித்து நிறைவு பெற்றார்.

கடைசி நாளையொட்டி பக்தர்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நின்று அத்தி வரதரை தரிசித்து சென்றனர். இந்நிலையில், அத்திவரதர் வைக்கக்கூடிய குளத்தின் பள்ளி அறையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அத்தி வரதர் தரிசனம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதுவரை ஒரு கோடி பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துள்ளனர். சனிக்கிழமை காவல்துறையின் பாதுகாப்புடன் பத்திரமாக திருக்குளத்தில் அத்தி வரதர் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், இந்த 47 நாட்களும் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர், வருவாய்த்துறையினர், ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள், காஞ்சிபுரம் மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்தி வரதர் தரிசனம் தொடக்கத்தில் ஒரு லட்சம் மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் படிப்படியாக உயர்ந்து 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை தரிசித்து சென்றனர். மக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்ததால் பதினான்காயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர் என்று தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் பொன்னையா

இதுவரை ஏறக்குறைய ஆயிரத்து 700 சுகாதாரப் பணியாளர்கள் சிறப்பாகப் பணியாற்றினார்கள், பக்தர்களுக்கு உதவ காவல் உதவி மையம், மருத்துவ சேவை, தீயணைப்புத் துறையினரின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் உள்ளிட்டவைகள் சிறப்பாக அமைக்கப்பட்டன. பொதுப்பணித்துறை பேரூராட்சி, நகராட்சித் துறை உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் பங்களிப்பு வெகு சிறப்பாக இருந்தது என அவர் கூறினார்.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் அத்தி வரதர் தரிசனம் இதுவரை ஒரு கோடி மக்கள் பார்வையிட்டு அத்திவரதர் இடம் ஆசீர்வாதம் பெற்றார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இன்றைய கடைசி நாள் என்பதால் கூட்டம் கட்டுக்கடங்காத அலைமோதி வரிசையில் நின்று அத்தி வரதரை தரிசனம் செய்து பக்தர்கள் கண்டு செல்கின்றன





Body:16_08_2019

காஞ்சிபுரம் மாவட்டம் செய்தியாளர் சுரேஷ்பாபு


காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம் 47 ஆம் நாள் புஷ்பாங்கி வைபவம் பக்தர்களுக்கு காட்சி அருளும் செய்யாத்துரை நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் இன்று தரிசித்து வருகின்றனர் இன்றே கடைசி நாள் என்பதால் கூட்டம் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி அத்தி வரதரை காண ஓடோடி வருகிறார்கள். இன்று இரவுடன் அத்தி வரதர் தரிசனம் நிறுத்தப்பட உள்ளது. இதுவரை பக்தர்கள் மூன்றில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.


இதுவரை ஒரு கோடி மக்கள் சாமி தரிசனம் செய்தார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நாளை அத்திவரதர் வைக்கக்கூடிய குளத்தின் பள்ளி அறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்.

அத்தி வரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெற்றது. இதுவரை ஒரு கோடி பக்தர்கள் அத்தி வரதர் தரிசனம் செய்துள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

நாளை காவல்துறையின் பாதுகாப்புடன் பத்திரமாக திருக்குளத்தில் அத்தி வரதர் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சிறப்பாக பணியாற்றிய காவல் துறை சுகாதாரத்துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரை மாவட்ட ஆட்சியர் வெகுவாக பாராட்டினார். கடந்த 1. 7. 2019 முதல் துவங்கிய அத்தி வரதர் சாமி தரிசனம் . தொடர்ந்து நடந்து வருகிறது .இன்றுடன் 47 நாட்கள் அத்தி வரதர் தரிசனம் நடைபெற்றது. இன்று இரவுடன் அத்தி வரதர் தரிசனம் நிறைவடைகிறது. நாளை ஆகம விதிகளின்படி சாமிக்கு செய்ய வேண்டிய அனைத்து சமயங்களும் செய்யப்படும் அருகிலுள்ள அனந்தசரஸ் குளத்தில் பள்ளியறையில் அவர் வைக்கப்பட உள்ளார் இந்த 47 நாட்களும் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர் வருவாய்த்துறையினர் ஊழியர்கள் தன்னார்வ தொண்டர்கள் காஞ்சிபுரம் மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அடிப்படை வசதிகளை தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி ஆணையின்படி செயல்பட்டு வந்தது என்றும் .


அத்தி வரதர் தரிசனம் தொடக்கத்தில் ஒரு லட்சம் மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் படிப்படியாக உயர்ந்து 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை தரிசித்து சென்றனர் இதனால் காவல் துறையினர் 2,800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் மக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்ததால் 14000 வரை காவல் துறையினர் அத்தி வரதரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்ததற்கு பாராட்டு தெரிவித்தார் .

இதுவரை ஒரு கோடி மக்கள் வந்து அத்தி வரதர் தரிசனம் செய்து இருக்கிறார்கள் இது வரை ஏறக்குறைய ஆயிரத்து 700 சுகாதாரப் பணியாளர்கள் சிறப்பாகப் பணியாற்றினார்கள் என்றும் பக்தர்களுக்கு உதவ காவல் உதவி மையம் மருத்துவ சேவை தீயணைப்புத் துறையினரின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் உள்ளிட்டவைகள் சிறப்பாக அமைக்கப் பட்டன பொதுப்பணித்துறை பேரூராட்சி நகராட்சி துறை உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் பங்களிப்பு வெகு சிறப்பாக இருந்தது எனக் கூறினார் அதுமட்டுமில்லாமல் 46 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு அதேபோல் ஆம்புலன்ஸ்கள் பைக் ஆம்புலன்ஸ் பக்தர்கள் எந்த சிரமமுமின்றி அத்தி வரதர் தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இன்றைய தனத்தோடு அத்தி வரதர் தரிசனம் நிறைவடைகிறது என்று காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையன் தெரிவித்தார் நாளை அத்தி வரதர் சுவாமி சிலை அருகில் உள்ள குளத்தில் வைக்கப்பட உள்ளது என்றும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் .

etv செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் காஞ்சிபுரத்திலிருந்து சுரேஷ்பாபு








Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.