ETV Bharat / state

மதுக்கடை நோக்கி படையெடுப்பு: தடுத்து நிறுத்தும் காவல் துறை!

author img

By

Published : May 5, 2020, 11:17 AM IST

ஈரோடு: தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் உள்ள மதுபானக் கடைகளில் தமிழ்நாட்டிலிருந்து மது வாங்கச் சென்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

கர்நாடாகா மதுபானக் கடை திறப்பு  மதுபானக் கடை  சாம்ராஜ்நகர் மதுபானக் கடை திறப்பு  Opening of Karnataka Liquor Store  Liquor Shop  Opening of Karnataka Liquor Shop  Samrajnagar Liquor Shop Opening
Opening of Karnataka Liquor Store

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளதால் கேரளா தவிர்த்து மற்ற மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நேற்று முதல் சில தளர்வுகள் செய்யப்பட்டு மதுபானக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, பச்சை மண்டலமாக உள்ள சத்தியமங்கலம் அருகே தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால், மதுப்பிரியர்கள் மது வாங்குவதற்காக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் படையெடுத்துச் சென்றனர்.

அப்போது, பண்ணாரி சோதனைச் சாவடியில் காவல் துறையினர் சோதனை நடத்தியபோது தாளாவடி பகுதியில் விவசாயத்தோட்டம் இருப்பதாகக் கூறி முதலில் 10 பேர் சென்ற நிலையில் திடீரென மதியத்திற்கு பிறகு தாளவாடி செல்வதாக சிலர் வந்தனர்.

இதையடுத்து, தாளவாடியில் வசிப்பதற்கான ஆதார் அட்டை அல்லது தோட்டத்துக்கான பட்டா ரசீது ஆகியவற்றை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் மது வாங்க வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து, ஆசனூர் பகுதி மதுப்பிரியர்கள் காராப்பள்ளம் சோதனைச்சாவடி வழியாக தாளவாடி செல்வதாக வந்தவர்களை காவல் துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து, காராப்பள்ளம் சோதனைச்சாவடியில் காவல் துறையினர் தடுப்பு கம்பி அமைத்து தேவையில்லாத வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

இதையும் படிங்க:உணவகத்தில் அமர்ந்து உண்ட வாடிக்கையாளர்கள் - உணவகத்துக்குச் சீல் வைத்து நடவடிக்கை

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளதால் கேரளா தவிர்த்து மற்ற மாநிலங்களில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நேற்று முதல் சில தளர்வுகள் செய்யப்பட்டு மதுபானக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, பச்சை மண்டலமாக உள்ள சத்தியமங்கலம் அருகே தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால், மதுப்பிரியர்கள் மது வாங்குவதற்காக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் படையெடுத்துச் சென்றனர்.

அப்போது, பண்ணாரி சோதனைச் சாவடியில் காவல் துறையினர் சோதனை நடத்தியபோது தாளாவடி பகுதியில் விவசாயத்தோட்டம் இருப்பதாகக் கூறி முதலில் 10 பேர் சென்ற நிலையில் திடீரென மதியத்திற்கு பிறகு தாளவாடி செல்வதாக சிலர் வந்தனர்.

இதையடுத்து, தாளவாடியில் வசிப்பதற்கான ஆதார் அட்டை அல்லது தோட்டத்துக்கான பட்டா ரசீது ஆகியவற்றை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் மது வாங்க வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து, ஆசனூர் பகுதி மதுப்பிரியர்கள் காராப்பள்ளம் சோதனைச்சாவடி வழியாக தாளவாடி செல்வதாக வந்தவர்களை காவல் துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து, காராப்பள்ளம் சோதனைச்சாவடியில் காவல் துறையினர் தடுப்பு கம்பி அமைத்து தேவையில்லாத வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

இதையும் படிங்க:உணவகத்தில் அமர்ந்து உண்ட வாடிக்கையாளர்கள் - உணவகத்துக்குச் சீல் வைத்து நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.