ETV Bharat / state

வாகன சோதனையில் 1.46 லட்சம் பறிமுதல்!

author img

By

Published : Mar 21, 2021, 9:48 AM IST

ஈரோடு : கிருஷ்ணாபுரம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள ஆலாம்பாளையம் தேர்வீதியை சேர்ந்தவர் சேகர். சொந்தமாகக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சேகர் தனக்கு சொந்தமான ஆம்னி வேனில், கடைக்குத் தேவையான மளிகைப் பொருள்களை ஏற்றிக் கொண்டு அந்தியூரிலிருந்து பர்கூர் செல்லும் சாலையில் வந்துள்ளார்.

அப்போது கிருஷ்ணாபுரம் அருகே அலுவலர் முருகன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த வகையில் சேகரின் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படையினர், சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் உரிய ஆவணங்களின்றி ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது.

தொடர்ந்து, உடனடியாக அப்பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அந்தியூர் தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணத்தைக் காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லுமாறும் தேர்தல் அலுவலர்கள் சேகரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : 10 ஆண்டுகள் வனவாசம் சென்றும் திமுக திருந்தவில்லை!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள ஆலாம்பாளையம் தேர்வீதியை சேர்ந்தவர் சேகர். சொந்தமாகக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சேகர் தனக்கு சொந்தமான ஆம்னி வேனில், கடைக்குத் தேவையான மளிகைப் பொருள்களை ஏற்றிக் கொண்டு அந்தியூரிலிருந்து பர்கூர் செல்லும் சாலையில் வந்துள்ளார்.

அப்போது கிருஷ்ணாபுரம் அருகே அலுவலர் முருகன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த வகையில் சேகரின் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படையினர், சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் உரிய ஆவணங்களின்றி ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது.

தொடர்ந்து, உடனடியாக அப்பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அந்தியூர் தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணத்தைக் காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லுமாறும் தேர்தல் அலுவலர்கள் சேகரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : 10 ஆண்டுகள் வனவாசம் சென்றும் திமுக திருந்தவில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.