ETV Bharat / state

மின் உற்பத்தி கழக ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் - Power workers contract workers struggle

ஈரோடு: மின் உற்பத்தி கழகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
author img

By

Published : Nov 23, 2019, 2:17 AM IST

தமிழ்நாடு முழுவதும் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டுக்கு முன் கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பணியாற்றிய மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களுக்கு தகுதியின் அடிப்படியில் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று மின்வாரி துறை அமைச்சர் மூலமாக தெரிவிக்கப்பட்டது.

ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

இந்நிலையில், மின் துறை அமைச்சர் அறிவித்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஊராட்சி கோட்டை மின் உற்பத்தி தடுப்பணையின் முன்பு 100க்கும் மேற்பட்ட மின் வாரிய ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களது கோரிக்கையை தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லை என்றால், மாநில அளவில் போராட்டங்கள் நடத்துவோம் என எச்சரித்தனர்.

இதையும் படிங்க: செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரித்து பொதுமக்கள் போராட்டம்!

தமிழ்நாடு முழுவதும் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டுக்கு முன் கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பணியாற்றிய மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களுக்கு தகுதியின் அடிப்படியில் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று மின்வாரி துறை அமைச்சர் மூலமாக தெரிவிக்கப்பட்டது.

ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

இந்நிலையில், மின் துறை அமைச்சர் அறிவித்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஊராட்சி கோட்டை மின் உற்பத்தி தடுப்பணையின் முன்பு 100க்கும் மேற்பட்ட மின் வாரிய ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களது கோரிக்கையை தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் இல்லை என்றால், மாநில அளவில் போராட்டங்கள் நடத்துவோம் என எச்சரித்தனர்.

இதையும் படிங்க: செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரித்து பொதுமக்கள் போராட்டம்!

Intro:ஈரோடு ஆனந்த்
நவ22

கோரிக்கைகளை வலியுறுத்தி மின் உற்பத்தி கழக ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்!

மின் உற்பத்தி கழகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து பவானி அடுத்துள்ள ஊராட்சி கோட்டை தடுப்பணை முன்பு 100-க்கும் மேற்பட்ட மின் வாரிய ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக சுமார் 15-ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 10-ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயல் பாதிக்கபட்ட மாவட்டங்களில் பணியாற்றிய மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களுக்கு தகுதியின் அடிப்படியில் பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படும் என்று மின்வாரி துறை அமைச்சர் மூலமாக தெரிவிக்கபட்டது.

Body:இந்நிலையில் மின் துறை அமைச்சர் ஒப்பந்த பணியாளர்களுக்கு அறிவித்த பணி நிரந்தரம், ஊதிய உயர்வு ஆகிவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணியில் ஏற்படும் விபத்துக்கான காப்பீடுகளை மின்துறை ஏற்கொள்ள வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன்வைத்து ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஊராட்சி கோட்டை மின் உற்பத்தி தடுப்பணையின் முன்பு 100-க்கும் மேற்பட்ட மின் வாரிய ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Conclusion:மேலும் தங்களது கோரிக்கையை தமிழக அரசும் மின்சார வாரியமும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் மாநில அளவில் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

பேட்டி: நாகராஜன் -மாநில துணை செயலாளர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.