ETV Bharat / state

குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு! - ஈரோட்டில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே குடியிருப்புப் பகுதியை ஒட்டி அமையவிருக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

people protest against tasmac in erode
டாஸ்மாக் அமைய பொதுமக்கள் எதிர்ப்பு
author img

By

Published : Dec 8, 2019, 3:33 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - கோவை செல்லும் சாலையில் அமைந்துள்ள காந்திநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி அருகே புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் கடையை எதிர்த்த பொதுமக்கள்

டாஸ்மாக் கடைக்கான சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு வந்த நிலையில் இப்பகுதி பெண்கள் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி டாஸ்மாக் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் அமையவிருக்கும் டாஸ்மாக்கினால் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

டாஸ்மாக்கை எதிர்த்து போராடிய பெண்கள்

பின்னர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், இந்த விவகாரம் குறித்து வட்டாட்சியரிடம் கூறி விரைவில் சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததை அடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையும் படிங்க: செல்ஃபோன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு; பொறியாளருடன் மக்கள் வாக்குவாதம்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - கோவை செல்லும் சாலையில் அமைந்துள்ள காந்திநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி அருகே புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் கடையை எதிர்த்த பொதுமக்கள்

டாஸ்மாக் கடைக்கான சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு வந்த நிலையில் இப்பகுதி பெண்கள் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி டாஸ்மாக் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் அமையவிருக்கும் டாஸ்மாக்கினால் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே, டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

டாஸ்மாக்கை எதிர்த்து போராடிய பெண்கள்

பின்னர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர், இந்த விவகாரம் குறித்து வட்டாட்சியரிடம் கூறி விரைவில் சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததை அடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையும் படிங்க: செல்ஃபோன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு; பொறியாளருடன் மக்கள் வாக்குவாதம்!

Intro:


Body:சத்தியமங்கலத்தில் இருந்து கோவை செல்லும் சாலையில் அமைந்துள்ளது காந்திநகர் இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக இருப்பதால் இங்கு அமைக்க தயாராக நிலையிலிருந்த டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் டாஸ்மார்க் கடைக்கான சுற்றுச்சூழல் எழுப்பப்பட்டு கடைக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு வந்த நிலையில் இப்பகுதி பெண்கள் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினர் அங்கு வந்த போலீசார் அப்பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் டாஸ்மார்க் அமையும் பகுதியில் பள்ளி மாணவர்கள் நடந்து செல்வதால் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இதையடுத்து வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு ஏற்படும் என போலீசார் அளித்த உறுதிமொழியை அடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.