ETV Bharat / state

திம்பம் மலைப்பாதையில் படுத்திருந்த சிறுத்தை - வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோடு: திம்பம் ஆறாவது மலைப்பாதையின் ஓரத்தில் அமர்ந்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

author img

By

Published : Jan 13, 2020, 7:05 PM IST

leopard
leopard

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகள் அதிகளவில் உள்ளன. திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாடுவதால், இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. பகலில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திம்பம் ஆறாவது பாதையில் சிறுத்தை ஒன்று ’ஹாயாக’ சாலை ஓரத்தில் அமர்ந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், வாகனத்தை ஓட்டியபடி செல்போனில் படம் பிடித்தனர்.

அதேபோல, மற்றொரு சிறுத்தை சாலையில் இருந்து திம்பம் வனத்துக்குள் நடந்து செல்வதை போலவும் வீடியோ வெளியாகி உள்ளது. திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைகள் அதிகமாக நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மலைப்பாதையில் படுத்திருக்கும் சிறுத்தை

இதனிடையே, திம்பம் மலைப்பாதை மலைச்சரிவில் ஏறமுயன்ற மற்றோரு சிறுத்தை தவறிவிழுந்து உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக சிறுத்தையின் உடலை கைப்பற்றி தலமலை வனத்துறையினர் ஆய்வுசெய்து வருகின்றனர்.

இறந்துகிடக்கும் சிறுத்தை

திம்பம், பண்ணாரி வனத்தில் மான்கள் அதிகளவில் இருப்பதால் அதனை வேட்டையாட சிறுத்தை சாலையை கடந்துசெல்வது வழக்கம். அப்போது திம்பம் மலைப்பாதையில் உலாவிய ஐந்து வயதுள்ள பெண் சிறுத்தை, 11ஆவது வளைவில் உள்ள மலைச்சரிவில் ஏறமுயன்றபோது மரக்கிளையில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சிறுத்தையின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசியதால் இரு தினங்களுக்கு முன் சிறுத்தை இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பெண் சிறுத்தை மர்மமான முறையில் உயரிழப்பு: வனத்துறையினர் விசாரணை!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகள் அதிகளவில் உள்ளன. திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாடுவதால், இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. பகலில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திம்பம் ஆறாவது பாதையில் சிறுத்தை ஒன்று ’ஹாயாக’ சாலை ஓரத்தில் அமர்ந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், வாகனத்தை ஓட்டியபடி செல்போனில் படம் பிடித்தனர்.

அதேபோல, மற்றொரு சிறுத்தை சாலையில் இருந்து திம்பம் வனத்துக்குள் நடந்து செல்வதை போலவும் வீடியோ வெளியாகி உள்ளது. திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைகள் அதிகமாக நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மலைப்பாதையில் படுத்திருக்கும் சிறுத்தை

இதனிடையே, திம்பம் மலைப்பாதை மலைச்சரிவில் ஏறமுயன்ற மற்றோரு சிறுத்தை தவறிவிழுந்து உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக சிறுத்தையின் உடலை கைப்பற்றி தலமலை வனத்துறையினர் ஆய்வுசெய்து வருகின்றனர்.

இறந்துகிடக்கும் சிறுத்தை

திம்பம், பண்ணாரி வனத்தில் மான்கள் அதிகளவில் இருப்பதால் அதனை வேட்டையாட சிறுத்தை சாலையை கடந்துசெல்வது வழக்கம். அப்போது திம்பம் மலைப்பாதையில் உலாவிய ஐந்து வயதுள்ள பெண் சிறுத்தை, 11ஆவது வளைவில் உள்ள மலைச்சரிவில் ஏறமுயன்றபோது மரக்கிளையில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சிறுத்தையின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசியதால் இரு தினங்களுக்கு முன் சிறுத்தை இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பெண் சிறுத்தை மர்மமான முறையில் உயரிழப்பு: வனத்துறையினர் விசாரணை!

Intro:Body:tn_erd_01_sathy_leopard_death_vis_tn10009

திம்பம் மலைப்பாதை சரிவில் தவறிவிழுந்த 4 வயது பெண் சிறுத்தை உயிரிழப்பு:
உடலை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை மலைச்சரிவில் ஏற முயன்ற சிறுத்தை தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறுத்தையின் உடலை கைப்பற்றி தலமலை வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. அண்மையில் நடந்த கணக்கெடுப்பின்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தில் 120 சிறுத்தைகள் உள்ளதாகதெரியவந்தது. இதன்படி சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ப அதன் எல்லையை விரிவு படுத்துகின்றன. திம்பம், பண்ணாரி வனத்தில் மான்கள் அதிகளவில் இருப்பதால் அதனை வேட்டையாட சிறுத்தை சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் திம்பம் மலைப்பாதையில் உலாவிய 5 வயதுள்ள பெண் சிறுத்தை, 11 வது வளைவில் உள்ள மலைச்சரிவில் ஏறமுயன்றுள்ளது.அப்போது அது தவறிவிழுந்ததில் காயம் ஏற்பட்டு மரக்கிளையில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தலமலை வனத்துறையினர் சிறுத்தையின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சிறுத்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதால் 2 தினங்களுக்கு முன் சிறுத்தை இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான த்துவகுழுவினர் சிறுத்தையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். றுத்தை காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதா அல்லது வாகனத்தில் அடிப்பட்டு மலைச்சரிவில் ஏறும்போது உயிரிழந்துள்ளதாக என பரிசோதனையின் முடிவில் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.