ETV Bharat / state

விபத்துக்கள் குறைந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு- அமைச்சர் செங்கோட்டையன்

author img

By

Published : Jan 24, 2020, 5:49 PM IST

ஈரோடு: விபத்துக்கள் குறைந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிக்கை சந்திப்பு அமைச்சர் செங்கோட்டையன் Minister Senkottaiyan Press Meet Minister Senkottaiyan Erode Minister Senkottaiyan Press Meet
Minister Senkottaiyan

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கரட்டடிபாளையத்தில் செயல்பட்டு வரும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சசர் செங்கோட்டையன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ”சாலை பாதுகாப்பு வாரவிழா என்பது சாலைகளில் விபத்துக்களை குறைப்பதற்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுவருகிறது.

மாணவ - மாணவிகள் சாலை விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது என்றார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நான்கு வழிச்சாலைகள், ஆறு வழிச்சாலைகள் என தமிழ்நாட்டில் முதலமைச்சர் நிறைவேற்றி காட்டியுள்ளார்.

10 நாள்களுக்கு முன்பு விபத்துக்கள் குறைந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் விருது பெற்றுள்ளார். இந்தியாவில் வாகன எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதில், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகளவு இருசக்கர வாகனங்கள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை சாலைகளை விரிவுபடுத்தவும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

நீட் தேர்விற்கு கடந்தாண்டைவிட இந்தாண்டு 17 விழுக்காடு குறைவான விண்ணப்பத்திற்கு காரணம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்தான் பதிலிளிப்பார். அவர்தான் மருத்துவம் சார்ந்த துறைகளை மேற்கொண்டுவருகிறார் என்றார்.

அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு


இந்து முறைப்படி மீண்டும் திருமணம் - எல்லைகளைத் தாண்டிய காதல் கதை
இதையும் படிங்க:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கரட்டடிபாளையத்தில் செயல்பட்டு வரும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சசர் செங்கோட்டையன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ”சாலை பாதுகாப்பு வாரவிழா என்பது சாலைகளில் விபத்துக்களை குறைப்பதற்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுவருகிறது.

மாணவ - மாணவிகள் சாலை விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது என்றார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நான்கு வழிச்சாலைகள், ஆறு வழிச்சாலைகள் என தமிழ்நாட்டில் முதலமைச்சர் நிறைவேற்றி காட்டியுள்ளார்.

10 நாள்களுக்கு முன்பு விபத்துக்கள் குறைந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் விருது பெற்றுள்ளார். இந்தியாவில் வாகன எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதில், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகளவு இருசக்கர வாகனங்கள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை சாலைகளை விரிவுபடுத்தவும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

நீட் தேர்விற்கு கடந்தாண்டைவிட இந்தாண்டு 17 விழுக்காடு குறைவான விண்ணப்பத்திற்கு காரணம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்தான் பதிலிளிப்பார். அவர்தான் மருத்துவம் சார்ந்த துறைகளை மேற்கொண்டுவருகிறார் என்றார்.

அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு


இந்து முறைப்படி மீண்டும் திருமணம் - எல்லைகளைத் தாண்டிய காதல் கதை
இதையும் படிங்க:

Intro:Body:நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் குறைவுக்கு காரணம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தான் பதிலளிப்பார்: அமைச்சர் செங்கோட்டையன்

tn_erd_02_sathy_neet_exam_kas_minister_vis_tn10009

தமிழகம் விபத்து குறைந்த மாநிலத்திற்காக விருதை பெற்றுள்ளது. நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் குறைவுக்கு காரணம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தான் பதிலளிப்பார் நீர் தேர்வை பொருத்தவரை நீட்டாக போய்க்கொண்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோடடையன் கோபிசெட்டிபாளையத்தில் பேட்டியளித்துள்ளார்.


ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் செயல்படும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் 31வது சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சசர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையில் சாலை பாதுகாப்பு வாரவிழா என்பது சாலைகளில் விபத்துக்கள் குறைப்பதற்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று வருகிறது. மாணவ மாணவிகள் சாலை விதிகளை கடைபித்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவேண்டும் என்றும் மாணவர்களின் எதிர்கால நலகை மனதில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறதாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் போக்குவரத்து நெரிசலைக்குறைக்க நான்கு வழிச்சாலைகள் ஆறு வழிச்சாலைகள் என தமிழகத்தில் முதல்வர் நிறைவேற்றி காட்டியுள்ளார். 10 நாள்களுக்கு முன்னாள் விபத்துக்கள் குறைந்த மாநில விருதை போக்குவரத்துறை அமைச்சர் பெற்றுள்ளார். இந்தியாவில் வாகன எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலமாக திகழ்கிறது. இதில் ஈரோடு சேலம் கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகளவு இருசக்கர வாகனங்கள் உள்ளது. தமிழகத்தை பொருத்த வரையிலும் சாலைகளை விரிவுபடுத்தவும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நீட் தேர்விற்கு கடந்தாண்டை விட இந்தாண்டு 17 சதவிகிதம் பேர் குறைவாக விண்ணப்பத்திற்க்கு காரணம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தான் பதிலிளிப்பார். அவர்தான் மருத்துவம் சார்ந்த துறைகளை மேற்கொண்டுவருகிறார். என்றும் நீட்தேர்விற்கு தனியார் பள்ளிகள் பயிற்சி மேற்கொண்டுவரும் நிலையில் அரசு பயிற்சி தாமதாகவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நீர் தேர்வை பொருத்தவரை நீட்டாக போய்கொண்டுள்ளது நீங்கள் பார்க்கப்போகறீர்கள் என தெரிவித்தார். இவ்விழாவில் மாவட்ட முன்சிப் நீதிமன்ற நீதிபதி கணேசன் துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பன் காவல்துணைக்கண்காணிப்பாளர் தங்கவேல் வட்டாரப்போக்குவரத்துக்கழக அலுவலர் பழனிவேலு கல்லூரி முதல்வர் தியாராசு மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்…
பேட்டி:
திரு.கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.