ETV Bharat / state

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்தவர் ஈரோட்டில் கைது!

author img

By

Published : Jul 28, 2022, 10:43 AM IST

Updated : Jul 28, 2022, 11:28 AM IST

ஈரோட்டில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்த யாசிப் முஷபீனை போலீசார் கைது செய்தனர்.

தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் ஈரோட்டில் கைது!
தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் ஈரோட்டில் கைது!

ஈரோடு: பெங்களூர் திலக் நகரில் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த 24 ஆம் தேதி கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அப்துல் அலி ஜூபா அளித்த தகவலின் பேரில், ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் என்.ஐ.ஏ அலுவலர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த ஐந்து பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஒருவரை மட்டும் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சோதனை நடத்தி, வீட்டில் இருந்த தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்மார்ட் போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்களையும் கைப்பற்றினர். இதனிடையே அப்பகுதியில் பலத்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் ஈரோட்டில் கைது!

இதனையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தேசிய புலனாய்வு குழுவினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர், இருவரிடம் துருவி துருவி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 26 மணி நேர விசாரணையில், யாசிப் முஷபீன் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உறுப்பினராக இருந்து பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து யாசிப் முஷபீனை தேசிய தீவிரவாத தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் சிக்கிய ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர்.. தமிழ்நாட்டில் 8 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை...

ஈரோடு: பெங்களூர் திலக் நகரில் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த 24 ஆம் தேதி கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அப்துல் அலி ஜூபா அளித்த தகவலின் பேரில், ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் என்.ஐ.ஏ அலுவலர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த ஐந்து பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஒருவரை மட்டும் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சோதனை நடத்தி, வீட்டில் இருந்த தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்மார்ட் போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்களையும் கைப்பற்றினர். இதனிடையே அப்பகுதியில் பலத்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் ஈரோட்டில் கைது!

இதனையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தேசிய புலனாய்வு குழுவினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர், இருவரிடம் துருவி துருவி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 26 மணி நேர விசாரணையில், யாசிப் முஷபீன் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் உறுப்பினராக இருந்து பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து யாசிப் முஷபீனை தேசிய தீவிரவாத தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் சிக்கிய ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர்.. தமிழ்நாட்டில் 8 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை...

Last Updated : Jul 28, 2022, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.