ETV Bharat / state

‘கள்’ போதைப் பொருள்? - நிரூபிப்போருக்கு பத்து கோடி ரூபாய் பரிசு!

author img

By

Published : Dec 1, 2019, 1:26 PM IST

ஈரோடு: கள்ளும் தடைசெய்யப்பட வேண்டிய பொருளே என வாதிட்டு நிரூபிப்போருக்கு பத்து கோடி ரூபாய் பரிசு தரப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கள் இயக்கம் நல்லசாமி  ஈரோடு மாவட்டச் செய்திகள்  erode district news  கள் போதைப் பொருள் என நிரூபிப்போருக்கு பத்து கோடி பரிசு  tamilandu kal nallasamy  கள் இறக்குவோர் சங்கம்  10 crore reward announced by kal nallasamy for those who prove to be kal as drug
கள் போதைப் பொருள் என நிரூபிப்போருக்கு பத்து கோடி பரிசு

ஈரோட்டில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘பீகாரை பின்பற்றி தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதும் அங்கு கள்ளுக்கடைகளுக்கு தடைவிதிக்கவில்லை.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இந்த தடை நீடிக்கிறது. இது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதி. கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை. இந்த உரிமையை மீட்டெடுக்கும் விதமாக வருகின்ற 2020ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். 600க்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கப்படும்.

விவாசயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயும் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாயும் தருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது விவசாயிகளின் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் விடுக்கும் சவால் ஆகும்.

கள் போதைப் பொருள் என நிரூபிப்போருக்கு பத்து கோடி ரூபாய் பரிசு

கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் துணைப்பொருளான மொலாசசை மூலப்பொருளாகக் கொண்டு மதுபானம் தயாரிப்பதை விடுத்துவிட்டு, அவற்றிலிருந்து வாகன எரிபொருளான எத்தனால் தயாரிக்க முன்வர வேண்டும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "கள்ளும் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருளே என வந்து வாதிட்டு நிரூபிப்போருக்கு 10 கோடி ரூபாய் பரிசு தரப்படும்" என்றார்.

இதையும் படிங்க: 21 நாள்களாக முழுகொள்ளளவுடன் நீடிக்கும் பவானிசாகர் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோட்டில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘பீகாரை பின்பற்றி தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதும் அங்கு கள்ளுக்கடைகளுக்கு தடைவிதிக்கவில்லை.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இந்த தடை நீடிக்கிறது. இது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதி. கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை. இந்த உரிமையை மீட்டெடுக்கும் விதமாக வருகின்ற 2020ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். 600க்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கப்படும்.

விவாசயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயும் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாயும் தருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது விவசாயிகளின் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் விடுக்கும் சவால் ஆகும்.

கள் போதைப் பொருள் என நிரூபிப்போருக்கு பத்து கோடி ரூபாய் பரிசு

கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் துணைப்பொருளான மொலாசசை மூலப்பொருளாகக் கொண்டு மதுபானம் தயாரிப்பதை விடுத்துவிட்டு, அவற்றிலிருந்து வாகன எரிபொருளான எத்தனால் தயாரிக்க முன்வர வேண்டும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "கள்ளும் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருளே என வந்து வாதிட்டு நிரூபிப்போருக்கு 10 கோடி ரூபாய் பரிசு தரப்படும்" என்றார்.

இதையும் படிங்க: 21 நாள்களாக முழுகொள்ளளவுடன் நீடிக்கும் பவானிசாகர் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி

Intro:ஈரோடு ஆனந்த்
நவ30

2020 ஜனவரி முதல் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி!

வரும் 2020 ஜனவரி 21 முதல் தமிழ்நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி ஈரோட்டில் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது

இந்தியாவில் 60% விவசாயிகள் உள்ளனர் அனைத்து இடங்களிலும் விவசாயிகளுக்கு 50 % இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பழனிக்கு பஞ்சாமிர்தம் தருவதுபோல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயும் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் தொகுப்பும் வழங்குகின்றனர்.

கோதாவரி காவிரி இணைப்பு காலத்தின் கட்டாயம். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் இந்தத் திட்டம் நிறைவேற்ற வேண்டும்.
இதற்கு முன்னோடியாக பாண்டியாறு மோயாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றவர் கேரளாவிற்கு மின்சாரமும் தமிழகத்திற்கு தண்ணீர் என்ற அடிப்படையில் இந்த இணைப்பை செயல்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்குகொடுத்திருக்கும் உரிமை. இந்த உரிமையை மீட்டெடுக்கும் விதத்தில் வரும் 2020 ஜனவரி 21 முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். 600க்கும் மேற்பட்ட இடங்களில் கள் இறக்கப்படும் என்றார்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு மதுவிலக்கு சட்டம் உள்ளதா அல்லது மதுவிலக்குச் சட்டத்திற்கு உட்பட்டு அரசியலமைப்பு சட்டம் என்பதே நாங்கள் கேட்கும் கேள்வி.


Body:பீகாரை பின்பற்றி தமிழகத்திலும் மதுவிலக்கு கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்.
கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது அப்போதும் அங்கு கள்ளுக்கு தடை விதிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் தடை நீடிக்கிறது இது தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதி.
கள் இயக்கம் வைத்திருக்கும் கோரிக்கையில் நியாயம் இல்லை என யார் நிரூபித்தாலும் 10 கோடி ரூபாய் பரிசு கொடுக்கப்படும்... இது 8 கோடி மக்களுக்கும் கள் இயக்கம் வைக்கும் சவால் என்றார்.
Conclusion:ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாயும் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாயும் தருவதாக அறிவித்து இருப்பது விவசாயிகளின் தன்மானத்திற்கு சுயமரியாதைக்கும் விடுக்கும் சவால் ஆகும். பழனிக்கு பஞ்சாமிர்தம் தருவதாக கூறுவதும் விவசாயிகளுக்கு பணம் தருவதாக கூறுவதும் ஒன்றுதான். மொலாசசை மூலப்பொருளாகக் கொண்டு மதுபானம் தயாரிப்பதை கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.