ETV Bharat / state

’திமுக தலைமையிலான ஆட்சி இந்தியாவை காப்பாற்றும்’ - சீத்தாராம் யெச்சூரி

author img

By

Published : Mar 31, 2021, 9:49 AM IST

திண்டுக்கல்: பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. இந்தியாவைக் காப்பாற்ற தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

சீத்தாரம் யெச்சூரி
சீத்தாரம் யெச்சூரி

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து, நாகல்நகரில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசுகையில், ”திண்டுக்கல் தனித்துவம் மிக்க வரலாற்றைக் கொண்டது. சிவகங்கையில், வேலுநாச்சியார் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு தப்பி திண்டுக்கல் வந்தபோது, திப்பு சூல்தான் அவருக்கு உதவும் வகையில் மலைக்கோட்டையில் அடைக்கலம் கொடுத்தார்.

அப்படியிருந்த இந்து - முஸ்லீம் ஒற்றுமையை, இன்று ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் அழித்து வருகின்றன. மதச்சார்பற்று மனிதநேயத்தோடு இருப்பதால் தான் தமிழ்நாடு‌ சிறந்துவிளங்குகிறது. அந்த மனிதநேயத்தை சிதைப்பதற்காகவே பாஜக - ஆர்எஸ்எஸ் பணிபுரிகிறது. அதற்கு அதிமுகவும் உதவுகிறது.

இதைத் தடுக்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி தேவைப்படுகிறது. தமிழை மத்திய அரசு அழிக்கப் பார்க்கிறது. தமிழ்நாடு வரும்போது மோடியும் அமித்ஷாவும் தமிழ் மீது அக்கறை உள்ளது போல காட்டுகின்றனர். தாய் மொழியை யாராலும் தடுக்க முடியாது. அரசியல் சட்டம் சிதைக்கப்படுகிறது.

marxist communist general meeting
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மையினரை மத்திய அரசு நசுக்க பார்க்கிறது. இதனால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. இதை அனுமதிக்கக் கூடாது. பொதுத்துறை, விமானத்துறை, அமலாக்கத்துறை, கல்வித் துறை, பெட்ரோலிய துறை என அனைத்து துறை நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் தனியாருக்கு தரை வார்க்கப்படுகின்றன. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் அதற்கு தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். அதிமுக அரசு மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து சட்டங்களையும் ஆதரித்து வருகிறது. தமிழ்நாட்டில் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது.

அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி

தேர்தல் வந்து விட்டால், மோடி, அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்து பல்வேறு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். அதை தான் அதிமுக அரசும் செய்கிறது. மத்திய பாஜக அரசு ஏழு ஆண்டுகளும், அதிமுக 10 ஆண்டுகளும் ஆட்சி செய்து கொள்ளை அடித்து உள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: 'வீட்டிற்கு ஒரு யானை கொடுப்பேன் என முதலமைச்சர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை'

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து, நாகல்நகரில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசுகையில், ”திண்டுக்கல் தனித்துவம் மிக்க வரலாற்றைக் கொண்டது. சிவகங்கையில், வேலுநாச்சியார் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு தப்பி திண்டுக்கல் வந்தபோது, திப்பு சூல்தான் அவருக்கு உதவும் வகையில் மலைக்கோட்டையில் அடைக்கலம் கொடுத்தார்.

அப்படியிருந்த இந்து - முஸ்லீம் ஒற்றுமையை, இன்று ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் அழித்து வருகின்றன. மதச்சார்பற்று மனிதநேயத்தோடு இருப்பதால் தான் தமிழ்நாடு‌ சிறந்துவிளங்குகிறது. அந்த மனிதநேயத்தை சிதைப்பதற்காகவே பாஜக - ஆர்எஸ்எஸ் பணிபுரிகிறது. அதற்கு அதிமுகவும் உதவுகிறது.

இதைத் தடுக்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி தேவைப்படுகிறது. தமிழை மத்திய அரசு அழிக்கப் பார்க்கிறது. தமிழ்நாடு வரும்போது மோடியும் அமித்ஷாவும் தமிழ் மீது அக்கறை உள்ளது போல காட்டுகின்றனர். தாய் மொழியை யாராலும் தடுக்க முடியாது. அரசியல் சட்டம் சிதைக்கப்படுகிறது.

marxist communist general meeting
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மையினரை மத்திய அரசு நசுக்க பார்க்கிறது. இதனால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. இதை அனுமதிக்கக் கூடாது. பொதுத்துறை, விமானத்துறை, அமலாக்கத்துறை, கல்வித் துறை, பெட்ரோலிய துறை என அனைத்து துறை நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் தனியாருக்கு தரை வார்க்கப்படுகின்றன. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் அதற்கு தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். அதிமுக அரசு மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து சட்டங்களையும் ஆதரித்து வருகிறது. தமிழ்நாட்டில் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது.

அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி

தேர்தல் வந்து விட்டால், மோடி, அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்து பல்வேறு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். அதை தான் அதிமுக அரசும் செய்கிறது. மத்திய பாஜக அரசு ஏழு ஆண்டுகளும், அதிமுக 10 ஆண்டுகளும் ஆட்சி செய்து கொள்ளை அடித்து உள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: 'வீட்டிற்கு ஒரு யானை கொடுப்பேன் என முதலமைச்சர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.