திண்டுக்கல்: வேடசந்தூர் கோகுல் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நேற்றிரவு வேடசந்தூர் - திண்டுக்கல் சாலையில் உள்ள நாகம்பட்டி அருகே உள்ள பங்க்கில் தனது ஆம்னி காருக்கு கேஸ் நிரப்பிவிட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது வேடசந்தூர், லட்சுமணம்பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் பைக்கில் அதிவேகமாக வந்து, ஆம்னி கார் மீது மேதினார். இதனால் சங்கர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இதையடுத்து சங்கரை பங்க் ஊழியர்கள் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிலிண்டர் வெடித்து விபத்து - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்