ETV Bharat / state

நியாய விலை கடைகளில் மண்ணெண்ணெய் திருடி விற்பதாக குற்றச்சாட்டு!

author img

By

Published : Jul 24, 2019, 5:28 PM IST

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு சில நியாய விலை கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் திருடப்பட்டு கள்ளத்தனமாக விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

dharmapuri

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட கடகத்தூர் பகுதியில், 184 நியாய விலை கடைகள் உள்ளன. இதில் ஒரு சில கடைகளில் சரிவர மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை. இதுகுறித்து விற்பனையாளரிடம் முறையிட்டால், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு உள்ளது என தெரிவிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், பொது விநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல ஒப்பந்தம் செய்துள்ள லாரி உரிமையாளர் ராஜாமணி என்பவர் கூறுகையில், அனைத்து கடைகளுக்கும் மண்ணெண்ணெய் இறக்கும் போது, கூடுதலான பேரங்கள் இறக்குகிறோம். மறுநாள் கள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு கடைக்கு 100, 300 லிட்டர் வரை எடுக்கப்படுவதாகவும், இதனால் மாதத்திற்கு 3000 லிட்டர் வரை தட்டுப்பாடு ஏற்படுகிறது, என்றார்.

மேலும், இதுகுறித்து பலமுறை அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும், எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தருமபுரி

இது தொடர்பாக தருமபுரி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் சந்தானத்திடம் கேட்டபோது, பொதுமக்களுக்கு வழங்கக் கூடிய மண்ணெண்ணெய் தட்டுப்பாடு குறித்தும், கடைகளில் கள்ளத்தனமாக விற்பனை செய்வது குறித்தும் இதுவரை புகார்கள் வரவில்லை என்றார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட கடகத்தூர் பகுதியில், 184 நியாய விலை கடைகள் உள்ளன. இதில் ஒரு சில கடைகளில் சரிவர மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை. இதுகுறித்து விற்பனையாளரிடம் முறையிட்டால், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு உள்ளது என தெரிவிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், பொது விநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல ஒப்பந்தம் செய்துள்ள லாரி உரிமையாளர் ராஜாமணி என்பவர் கூறுகையில், அனைத்து கடைகளுக்கும் மண்ணெண்ணெய் இறக்கும் போது, கூடுதலான பேரங்கள் இறக்குகிறோம். மறுநாள் கள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு கடைக்கு 100, 300 லிட்டர் வரை எடுக்கப்படுவதாகவும், இதனால் மாதத்திற்கு 3000 லிட்டர் வரை தட்டுப்பாடு ஏற்படுகிறது, என்றார்.

மேலும், இதுகுறித்து பலமுறை அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும், எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தருமபுரி

இது தொடர்பாக தருமபுரி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் சந்தானத்திடம் கேட்டபோது, பொதுமக்களுக்கு வழங்கக் கூடிய மண்ணெண்ணெய் தட்டுப்பாடு குறித்தும், கடைகளில் கள்ளத்தனமாக விற்பனை செய்வது குறித்தும் இதுவரை புகார்கள் வரவில்லை என்றார்.

Intro:tn_dpi_01_ration_kerocin_theft_vis_7204444.mp4Body:tn_dpi_01_ration_kerocin_theft_vis_7204444.mp4Conclusion:பொம்மிடி அருகே நியாய விலை கடையில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயை, எடுத்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை-மாதம் 3000 லிட்டர் வரை தட்டுப்பாடு.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டாரத்திற்குட்பட்ட கடகத்தூர் பகுதியில் உள்ள 184 கடைகளுக்கு நியாய விலை கடைகளில் அரசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், மண்ணெண்ணெய் குடும்ப அட்டைக்கு வழங்கப்படுகிறது. இதில் மண்ணெண்ணெய் ஒரு சில கடைகளில் பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை. இதை விற்பனையாளரிடம் கேட்டால் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு உள்ளது. குறைவாகத்தான் வந்தது என தெரிவித்துவிடுகிறாராம்.
ஆனால் இந்த பகுதியில் பொது விநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகளுக்கு பொருட்களை எடுத்து செல்ல ஒப்பந்தம் செய்துள்ள லாரி உரிமையாளர் ராஜாமணி என்பவர், எல்லா கடைகளுக்கும் மண்ணெண்ணெய் இறக்கும் போது, கூடுதலாக பேரங்களை இறக்கி விட்டு, அடுத்த நாள் கள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாக புகார் கூறப்படுகிறது. இது போல, ஒரு கடைக்கு 100, 300 லிட்டர் வரை எடுக்கப்பட்டு, மாதம் 3000 லிட்டர் பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய மண்ணெண்ணெய் திருடப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இந்த பகுதியில் மாதத்திற்கு 3000 லிட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுகிறது. இதற்கு அனைத்து அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும், எடுக்காமல் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் சந்தானத்திடம் கேட்டபோது, பொதுமக்களுக்கு வழங்க கூடிய மண்ணெண்ணெய் தட்டுப்பாடாக இருக்கிறது என்பது பற்றி எனது பார்வைக்கு புகார்கள் வரவில்லை. மேலும் கடைகளில் இருந்து மண்ணெண்ணெய் கள்ளத்தனமாக எடுப்பது பற்றியும் புகார்கள் வரவில்லை. தற்போது இந்த புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.