ETV Bharat / state

ஒகேனக்கல்லில் நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியாக உயர்வு! - ஒகேனக்கல்

தருமபுரி: கர்நாடகாவில் இருந்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

ஒகேனக்கலில் நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு!
author img

By

Published : Aug 10, 2019, 1:02 PM IST

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடகா அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கபினி அணையில் இருந்து வியாழக்கிழமை முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் மூன்றாவது நாளாக தடை விதித்துள்ளது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன.

ஒகேனக்கலில் நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு!

மேலும், ஒகேனக்கலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளை பென்னாகரம் மடம் பகுதியிலேயே போலீசார் அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் தருமபுரி மாவட்ட காவல்துறையினர், தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடகா அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கபினி அணையில் இருந்து வியாழக்கிழமை முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் மூன்றாவது நாளாக தடை விதித்துள்ளது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன.

ஒகேனக்கலில் நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக உயர்வு!

மேலும், ஒகேனக்கலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளை பென்னாகரம் மடம் பகுதியிலேயே போலீசார் அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் தருமபுரி மாவட்ட காவல்துறையினர், தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:tn_dpi_01_hoganakkal_1lake_vis_p2c_7204444


Body:tn_dpi_01_hoganakkal_1lake_vis_p2c_7204444


Conclusion:

ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய ஒரு லட்சம் கன அடியாக உயர்வு.கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது. கபினி அணையில் இருந்து நேற்று முன்தினம் 80கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. திறந்து விடப்பட்ட நீர் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலு  வந்தடைந்தது.ஒகேனக்கல் பகுதியில் நேற்று மாலை நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக உயர்ந்து நள்ளிரவு 60 ஆயிரம் கன அடியை தாண்டி வந்து கொண்டிருந்தது.இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்தது.நீர்வரத்து அதிகரித்து அதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் மூன்றாவது நாளாக தடை விதித்துள்ளது.நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி .சினி பால்ஸ். மெயின் அருவி பகுதிகள்  நீரில் மூழ்கி உள்ளது. ஒகேனக்கல் தற்போதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

. ஒகேனக்கலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை பென்னாகரம் மடம் பகுதியிலேயே போலீசார் அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.பாதுகாப்பு பணியில் தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்

.சென்ற ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி ஒரு லட்சம் கன அடியாக தண்ணீர் வருவது இந்த ஆண்டும் அதே அளவு தண்ணீர் ஒகேனக்கலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.