ETV Bharat / state

பள்ளியில் மாணவனுக்கு ‘பிளேட்’ வெட்டு; மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகம்! - மாணவனை பிளேடால் வெட்டிய கொடூரம்

கடலூர்: மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் பிளேடால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்கப்பட்ட மாணவன்
தாக்கப்பட்ட மாணவன்
author img

By

Published : Jan 23, 2020, 9:32 AM IST

கடலூர் முதுநகர் அடுத்த காரைக்காடு பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன், சிவானந்தபுரத்தில் உள்ள காமாட்சி சண்முகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார். அதே வகுப்பில் படித்துவந்த பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி விட்டு வீட்டிறக்குச் செல்லும் வழியில் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை பள்ளியில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாகியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த மாணவன், தான் வைத்திருந்த பிளேடால் காரைக்காடு மாணவனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு, பலத்த காயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தாக்கப்பட்ட மாணவன்

பின்னர், மருத்துவமனைக்கு வந்த பள்ளி நிர்வாகத்தினர், சிகிச்சை பெற்று வந்த மாணவனை சந்தித்து, வகுப்பில் பலகையில் இடித்துக் கொண்டதால் இந்த காயங்கள் ஏற்பட்டது என காவல் துறையிடம் கூறவேண்டும் எனவும், இல்லையென்றால் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிடாமல் செய்துவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

படிப்பு நின்றுவிடுமோ என்ற அச்சத்தில், அந்த மாணவன் காவல் துறையினரிடம், கீழே விழுந்துவிட்டேன் என்று பொய் சொல்ல முயன்றுள்ளார். ஆனால், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பள்ளியில் சக மாணவன் தனது சாதியின் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், அதனால் தான் அவனை அடித்ததாகவும், அதற்கு அம்மாணவன் தன்னை பிளேடால் வெட்டியதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த மாணவன்

இதையடுத்து, பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த அந்த மாணவனைப் பிடித்து விசாரணை நடத்தியதில் ‘ஆத்திரத்தில் வெட்டிவிட்டேன்’ என்று கூறியுள்ளார். பின்னர், பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், எஸ்.சி, எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அம்மாணவரைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.

இதையும் படிங்க: இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கும்பல் - தேடுதல் வேட்டையில் போலீஸ்!

கடலூர் முதுநகர் அடுத்த காரைக்காடு பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன், சிவானந்தபுரத்தில் உள்ள காமாட்சி சண்முகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார். அதே வகுப்பில் படித்துவந்த பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி விட்டு வீட்டிறக்குச் செல்லும் வழியில் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை பள்ளியில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாகியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த மாணவன், தான் வைத்திருந்த பிளேடால் காரைக்காடு மாணவனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு, பலத்த காயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தாக்கப்பட்ட மாணவன்

பின்னர், மருத்துவமனைக்கு வந்த பள்ளி நிர்வாகத்தினர், சிகிச்சை பெற்று வந்த மாணவனை சந்தித்து, வகுப்பில் பலகையில் இடித்துக் கொண்டதால் இந்த காயங்கள் ஏற்பட்டது என காவல் துறையிடம் கூறவேண்டும் எனவும், இல்லையென்றால் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிடாமல் செய்துவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

படிப்பு நின்றுவிடுமோ என்ற அச்சத்தில், அந்த மாணவன் காவல் துறையினரிடம், கீழே விழுந்துவிட்டேன் என்று பொய் சொல்ல முயன்றுள்ளார். ஆனால், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பள்ளியில் சக மாணவன் தனது சாதியின் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், அதனால் தான் அவனை அடித்ததாகவும், அதற்கு அம்மாணவன் தன்னை பிளேடால் வெட்டியதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த மாணவன்

இதையடுத்து, பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த அந்த மாணவனைப் பிடித்து விசாரணை நடத்தியதில் ‘ஆத்திரத்தில் வெட்டிவிட்டேன்’ என்று கூறியுள்ளார். பின்னர், பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், எஸ்.சி, எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அம்மாணவரைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.

இதையும் படிங்க: இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கும்பல் - தேடுதல் வேட்டையில் போலீஸ்!

Intro:கடலூர் அருகே பள்ளியில் மாணவனுக்கு பிளேடால் வெட்டு -சக மாணவன் கைது .
Body:கடலூர் முதுநகர் அடுத்த காரைக்காடு பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவன் சிவானந்தபுரத்தில் காமாட்சி சண்மு கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இவனுக்கும் அதே வகுப்பில் படிக்கும் பச்சையாங்குப்பத்தை பகுதியை சேர்ந்த சக மாணவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலையில் பள்ளி விட்டு வீட்டிறக்கு செல்லும் வழியில் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது . இதனை தொடர்நது இன்று காலை பள்ளிக்கு இரண்டு பேரும் வகுப்பறையில் இருந்துள்ளனர் மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பபட்டு அடிதடியாகியுள்ளது இதில் ஆத்திரமடைந்த பச்சையாங்குப்பத்தை சேர்ந்த மாணவன் தான் வைத் திருந்த பிளேடால் காரைக்காடு மாணவனை சரமாரியாக வெட்டியுள்ளார் இதில் தலை,கழுத்து,கை ஆகியவற்றில் வெட்டு ஏற்பபட்டு பலத்த காயமுடைந்த மாணவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துனர்

பின்னர் மருத்துவமனைக்கு வந்த பள்ளி நிர்வாக தரப்பினர் சிகிச்சை பெற்று வந்த மாணவனை சந்தித்து வகுப்பில் பலகையில் இடித்து கொண்டேன் என போலிசாரிடம் சொல்லு இல்லை என்றால் 10 வகுப்பு பொது தேர்வு உன்னை எழுதவிடாமல் செய்துவிடுவேன் என கூறி மிரட்டியுள்ளனர் படிப்பு நின்றுவிடுமோ என பயந்த மாணவன் போலிசாரிடம் கீழே விந்துவிட்டேன் என கூறியுள்ளார் பின்னர் போலிசார் விசாரணை நடத்தியில் பள்ளியில் சக மாணவன் என்னை நீ (பறையன்) சாதி பெயரை சொல்லி திட்டினான் அதனால் நான் அடித்தேன் அவன் என்னை பிளாடால் வெட்டிவிட்டான் என போலிசாரிடம் கூறியுள்ளார் இதனை தொடர்நது போலிசார் பச்சையாங்குப்பத்தை சேர்ந்த சக மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் ஆத்திரத்தில் வெட்டிவிட்டேன் என கூறியுள்ளார் பின்னர் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் குடுத்த புகாரின் பேரில் போலிசார் எஸ் சி,எஸ்.டி. வழக்கு பதிவு செய்து சக மாணவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்ததனர்

இதுகுறித்து பள்ளியில் தொடர்பு கொண்டு பள்ளி தரப்பு குறித்த விளக்கம் கேட்க தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தொலைபேசிக்கு எடுக்கவில்லை


வெட்டுப்பட்டு காயம் அடைந்த மாணவன் பெயர் சிவமூர்ததி (எஸ்.சி)

வெட்டிய மாணவன் பெயர் கோபி (எம்பிசி)

பெயரை பயன்படுத்த ேவேண்டாம்

பேட்டி -சிவமூர்ததி
பேட்டி - லட்சுமி -உறவினர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.