ETV Bharat / state

இரண்டாவது நாளாக நடராஜர் ஆலயத்தில் அறநிலையத்துறை ஆய்வு, ஒத்துழைப்புத்தராத தீட்சிதர்கள்

author img

By

Published : Jun 8, 2022, 10:53 PM IST

இரண்டாவது நாளாக நான்காவது முறை, சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அறநிலையத்துறை விசாரணைக்குழு ஆய்விற்கு ஒத்துழைப்பினை தீட்சிதர்கள் தராததால் அலுவலர்கள் குழு திரும்பிச்சென்றனர்.

இரண்டாவது நாளாக நடராஜர் ஆலயத்தில் அறநிலையத்துறை ஆய்வு
இரண்டாவது நாளாக நடராஜர் ஆலயத்தில் அறநிலையத்துறை ஆய்வு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலயம் உலகப்புகழ் பெற்ற ஆலயம் ஆகும். தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் இந்த ஆலயத்திற்கு சொந்தமான சொத்துகளை தீட்சிதர்கள் அபகரித்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. மேலும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் நேற்று சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு, இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு வந்திருந்தது. இதில் அறநிலையத்துறை இணை ஆணையர்கள் லட்சுமணன், நடராஜன், மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், துணை ஆணையர் அரவிந்தன் ஆலயத்திற்கு வந்திருந்தனர்.

இவர்கள் கோயில் நிர்வகிக்கும் தீட்சதர்கள்களிடம் வரவு, செலவு கணக்குகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள விவரங்களைக் கேட்டனர். இதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி கணக்கு விவரங்களை அறநிலையத்துறை அலுவலர்களிடம் வழங்க மறுத்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று (ஜூன் 8) அறநிலையத்துறை சார்பாக ஆய்வுக்குழு வந்தனர்.

ஆனால், தீட்சிதர்கள் அலுவலகத்தை மூடிவிட்டுச்சென்றுவிட்டனர். இதனால் அலுவலர்கள் மீண்டும் ஆலயத்தில் காத்துக் கிடந்து பின் சென்று விட்டனர். அதைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் மீண்டும் இக்குழு ஆலயத்துக்கு வந்தபொழுது நடராஜர் ஆலயத்தில் உள்ள தேசிய அலுவலகம் மூடப்பட்டிருந்தது.

இரண்டாவது நாளாக நடராஜர் ஆலயத்தில் அறநிலையத்துறை ஆய்வு

இதையடுத்து அறையை விட்டு வெளியேறிய அறநிலையத்துறை அலுவலர்கள் குழு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது. அதில், ’தீட்சிதர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புத்தரவில்லை. உரிய அறிக்கை தயாரித்து இது சம்பந்தமாக அறநிலையத்துறை ஆணையரிடம் வழங்க உள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: மரண தண்டனை ஆயுளாக குறைப்பு!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலயம் உலகப்புகழ் பெற்ற ஆலயம் ஆகும். தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் இந்த ஆலயத்திற்கு சொந்தமான சொத்துகளை தீட்சிதர்கள் அபகரித்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. மேலும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் நேற்று சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு, இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு வந்திருந்தது. இதில் அறநிலையத்துறை இணை ஆணையர்கள் லட்சுமணன், நடராஜன், மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், துணை ஆணையர் அரவிந்தன் ஆலயத்திற்கு வந்திருந்தனர்.

இவர்கள் கோயில் நிர்வகிக்கும் தீட்சதர்கள்களிடம் வரவு, செலவு கணக்குகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள விவரங்களைக் கேட்டனர். இதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி கணக்கு விவரங்களை அறநிலையத்துறை அலுவலர்களிடம் வழங்க மறுத்தனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று (ஜூன் 8) அறநிலையத்துறை சார்பாக ஆய்வுக்குழு வந்தனர்.

ஆனால், தீட்சிதர்கள் அலுவலகத்தை மூடிவிட்டுச்சென்றுவிட்டனர். இதனால் அலுவலர்கள் மீண்டும் ஆலயத்தில் காத்துக் கிடந்து பின் சென்று விட்டனர். அதைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் மீண்டும் இக்குழு ஆலயத்துக்கு வந்தபொழுது நடராஜர் ஆலயத்தில் உள்ள தேசிய அலுவலகம் மூடப்பட்டிருந்தது.

இரண்டாவது நாளாக நடராஜர் ஆலயத்தில் அறநிலையத்துறை ஆய்வு

இதையடுத்து அறையை விட்டு வெளியேறிய அறநிலையத்துறை அலுவலர்கள் குழு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது. அதில், ’தீட்சிதர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புத்தரவில்லை. உரிய அறிக்கை தயாரித்து இது சம்பந்தமாக அறநிலையத்துறை ஆணையரிடம் வழங்க உள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: மரண தண்டனை ஆயுளாக குறைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.