ETV Bharat / state

'அ.. ஆ.. எழுதப் பழகிய குழந்தைகள்' - இது விஜயதசமி கொண்டாட்டம்!

கடலூர்: விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோயிலில் நடைபெற்ற ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எழுதப் படிக்க கற்று கொடுத்தனர்.

author img

By

Published : Oct 8, 2019, 11:34 PM IST

விஜயதசமி கொண்டாட்டம்

நாடு முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் கடலூர் அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையொட்டி ஹயக்ரீவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கரும்பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களைக் கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர்.

கடலூர் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி

பின்னர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்து, அதில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கையைப் பிடித்து "அ.. ஆ.." என தமிழ் எழுத்துகளை எழுதக் கற்று கொடுத்தனர். மேலும் குழந்தைகளும் இந்த ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

இதையும் படியுங்க:

விஜயதசமி நாளில் கோயில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி!

நாடு முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் கடலூர் அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையொட்டி ஹயக்ரீவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கரும்பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களைக் கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர்.

கடலூர் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி

பின்னர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்து, அதில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கையைப் பிடித்து "அ.. ஆ.." என தமிழ் எழுத்துகளை எழுதக் கற்று கொடுத்தனர். மேலும் குழந்தைகளும் இந்த ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

இதையும் படியுங்க:

விஜயதசமி நாளில் கோயில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி!

Intro:விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி. அ..ஆ என குழந்தைகள் எழுதினர்
Body:கடலூர்
அக்டோபர் 8,

கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இக்கோவில் கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்து சாமி கும்பிட்டு செல்வார்கள். இந்த நிலையில் நேற்று ஆயுத பூஜை மற்றும் இன்று விஜயதசமி விழாவை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து காலையிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி கும்பிட்டு சென்றனர் .

இந்த நிலையில் விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும். மேலும் இதே விஜயதசமி அன்று திருவோண நட்சத்திரம் வருவது மற்றொரு சிறப்பாகும். அந்த வகையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய சாமி சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து சென்று பூஜை செய்து பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள் . அதன்படி திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் எதிரே உள்ள அவுசதகிரி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் பொதுமக்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு, கருப்பு பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர். பின்னர் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்திருந்தனர் . இதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அந்த நெல்லில் ஏடு படிக்கும் நிகழ்ச்சியான தமிழில் " அ..ஆ" என எழுதி தங்கள் பள்ளிப் படிப்பை ஆர்வத்துடன் தொடங்கினர். மேலும் மாணவர்களும் ஆர்வத்துடன் ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலிலும் மற்றும் மலையில் உள்ள ஹயக்ரீவர் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டு சென்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.