ETV Bharat / state

நீட் விலக்கு என்ற பெயரில் திமுக மாணவர்களை குழப்பி வருகிறது - ஜி.கே.வாசன் குற்றசாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 5:38 PM IST

GK Vasan Byte: தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. டாஸ்மாக் விவகாரத்தில் திமுகவிடம் வெளிப்படைத் தன்மையை எதிர்பார்க்க முடியாது என தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமாக தலைவர் ஜி.கே வாசன்
தமாக தலைவர் ஜி.கே வாசன்
தமாக தலைவர் ஜி.கே வாசன்

கோயம்புத்தூர்: இராமநாதபுரம் 80 அடி சாலையில் கட்சியின் இளைஞர் அணி சார்பில், 10ஆம் ஆண்டு விழா, பொங்கல் நலத்திட்டம் வழங்கும் விழா மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்விற்கான இலவச வினா விடை புத்தகம் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட த.மா.க தலைவர் ஜி.கே வாசன், மருத்துவ படிப்பிற்குத் தயாராகி வரும் மாணவர்களுக்கு இலவச வினா - விடை புத்தகங்களை வழங்கினார்.

இதனை அடுத்து, இளைஞர் அணியின் சார்பின் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மருத்துவ முகாமையும் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே வாசன், "கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களிலும் சூயஸ் குடிநீர் குழாய்கள் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சி அளிப்பதாகவும் விரைந்து சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளையும், உக்கடம் ஆற்றுப்பாலம் மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாத அரசாக திமுக அரசு இருந்து வருகிறது.

இன்று (ஜன.7) நடைபெறும் பேச்சு வார்த்தையிலாவது போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்களும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் கொண்டு வந்த 7.5% சதவீதம் இட ஒதுக்கீடு என்பது மருத்துவ மாணவர்களின் வரப்பிரசாதமாக இருந்து உள்ளது. திமுக அரசு நீட் விலக்கு கையெழுத்து என்று துவங்கி, நீட் ரத்து செய்வதைப் போல மக்களைக் குழப்பி, பெற்றோர்களை அலைக்கழித்து வருகிறது. தயவு செய்து மாணவர்களிடம் அரசியலைப் புகுத்த வேண்டாம். தேர்தலுக்காக இது போன்ற அரசியலைச் செய்து மாணவர்களையும், பெற்றோர்களையும் தொடர்ந்து குழப்பி அலைக் கழித்து வருகிறது.

மேலும், இன்று தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. டாஸ்மாக் விவகாரத்தில் திமுகவிடம் வெளிப்படைத் தன்மையை எதிர்பார்க்க முடியாது. அதனால், தான் தமிழகத்தில் பல்வேறு போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது.

மேலும், கிளாம்பாக்கத்தில் எந்த அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளாமல் தேர்தல் நெருங்கி வருவதைக் கணக்கில் கொண்டு அவசரகதியில் பேருந்து நிலையத்தைத் திறந்து, தற்போது, பொது மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அவ்வளவு அவசரகதியில் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறப்பதற்கான அவசியம் என்ன?” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையில் அரசு விரைவாக முடிவெடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்!

தமாக தலைவர் ஜி.கே வாசன்

கோயம்புத்தூர்: இராமநாதபுரம் 80 அடி சாலையில் கட்சியின் இளைஞர் அணி சார்பில், 10ஆம் ஆண்டு விழா, பொங்கல் நலத்திட்டம் வழங்கும் விழா மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்விற்கான இலவச வினா விடை புத்தகம் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட த.மா.க தலைவர் ஜி.கே வாசன், மருத்துவ படிப்பிற்குத் தயாராகி வரும் மாணவர்களுக்கு இலவச வினா - விடை புத்தகங்களை வழங்கினார்.

இதனை அடுத்து, இளைஞர் அணியின் சார்பின் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மருத்துவ முகாமையும் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே வாசன், "கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களிலும் சூயஸ் குடிநீர் குழாய்கள் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சி அளிப்பதாகவும் விரைந்து சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளையும், உக்கடம் ஆற்றுப்பாலம் மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாத அரசாக திமுக அரசு இருந்து வருகிறது.

இன்று (ஜன.7) நடைபெறும் பேச்சு வார்த்தையிலாவது போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்களும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் கொண்டு வந்த 7.5% சதவீதம் இட ஒதுக்கீடு என்பது மருத்துவ மாணவர்களின் வரப்பிரசாதமாக இருந்து உள்ளது. திமுக அரசு நீட் விலக்கு கையெழுத்து என்று துவங்கி, நீட் ரத்து செய்வதைப் போல மக்களைக் குழப்பி, பெற்றோர்களை அலைக்கழித்து வருகிறது. தயவு செய்து மாணவர்களிடம் அரசியலைப் புகுத்த வேண்டாம். தேர்தலுக்காக இது போன்ற அரசியலைச் செய்து மாணவர்களையும், பெற்றோர்களையும் தொடர்ந்து குழப்பி அலைக் கழித்து வருகிறது.

மேலும், இன்று தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. டாஸ்மாக் விவகாரத்தில் திமுகவிடம் வெளிப்படைத் தன்மையை எதிர்பார்க்க முடியாது. அதனால், தான் தமிழகத்தில் பல்வேறு போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது.

மேலும், கிளாம்பாக்கத்தில் எந்த அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளாமல் தேர்தல் நெருங்கி வருவதைக் கணக்கில் கொண்டு அவசரகதியில் பேருந்து நிலையத்தைத் திறந்து, தற்போது, பொது மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அவ்வளவு அவசரகதியில் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறப்பதற்கான அவசியம் என்ன?” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையில் அரசு விரைவாக முடிவெடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.