ETV Bharat / state

ஆற்றில் கிடந்த சாமி சிலைகள்!

கோயமுத்தூர்: பேரூர் பகுதியில் உள்ள ஆற்றில் சிலைகள் கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

author img

By

Published : Feb 23, 2021, 6:14 AM IST

ஆற்றில் கிடைத்த சுவாமி சிலைகள்
ஆற்றில் கிடைத்த சுவாமி சிலைகள்

சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் பரிசல் ஓட்டும் நபர்கள் மூலம் ஆற்றில் தேடுதல் பணிகளை மேற்கொண்டனர். தேடுதலில் மொத்தம் 7 சாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சிலைகளை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று யார் அங்கு வீசி சென்றிருப்பார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பிடிப்பட்ட சிலைகள் அதிக எடையுடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கடத்தப்பட்ட சாமி சிலைகள் மீட்கப்பட்டது குறித்த செய்திகள் வெளிவந்த நிலையில், சாமி சிலைகள் ஆற்றில் போடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலைகள் கிடந்த ஆற்றில் மேலும் தேடுதல் பணியைத் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

இதையும் படிங்க: நிச்சயம் அரசியல் களம் காண்போம் - சகாயம்

சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் பரிசல் ஓட்டும் நபர்கள் மூலம் ஆற்றில் தேடுதல் பணிகளை மேற்கொண்டனர். தேடுதலில் மொத்தம் 7 சாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சிலைகளை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று யார் அங்கு வீசி சென்றிருப்பார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பிடிப்பட்ட சிலைகள் அதிக எடையுடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கடத்தப்பட்ட சாமி சிலைகள் மீட்கப்பட்டது குறித்த செய்திகள் வெளிவந்த நிலையில், சாமி சிலைகள் ஆற்றில் போடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலைகள் கிடந்த ஆற்றில் மேலும் தேடுதல் பணியைத் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

இதையும் படிங்க: நிச்சயம் அரசியல் களம் காண்போம் - சகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.