ETV Bharat / state

காதலனை கரம் பிடிக்க மூதாட்டியைக் கொன்று நகை கொள்ளை - இளம்பெண் கைது

author img

By

Published : Apr 16, 2022, 8:08 PM IST

பொள்ளாச்சியில் இன்று (ஏப்-16) காதலனை கரம்பிடிப்பதற்காக மூதாட்டியைக் கொன்று நகைகளை கொள்ளையடித்த இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காதலனை கரம் பிடிக்க மூதாட்டியை கொன்று நகை கொள்ளை!-இளம்பெண் கைது
காதலனை கரம் பிடிக்க மூதாட்டியை கொன்று நகை கொள்ளை!-இளம்பெண் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி எஸ்.வி. நாயுடு வீதியைச் சேர்ந்தவர், சதாசிவம். சொந்தமாக பஸ் வைத்து இயக்கி வந்தார். இவரது மனைவி நாகலட்சுமி(76 வயது). இவர்களுக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சதாசிவம் இறந்ததும் நாகலட்சுமி அவரது மகன் செந்தில்வேல் உடன் வசித்து வந்தார். இந்நிலையில் செந்தில்வேல் காலை உணவு சாப்பிட வீட்டிலிருந்து சுமார் 10:30 மணிக்கு வெளியே சென்றுள்ளார்.

சாப்பிட்டுவிட்டு 11:15 மணிக்கு வீட்டிற்குத் திரும்பி வந்தபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சோபாவில் தாய் நாகலட்சுமி இறந்துகிடந்தார். அதிர்ச்சியடைந்த செந்தில்வேல் தனது சகோதரிக்குத் தகவல் கொடுத்தார். செந்தில்வேலும் அவரது சகோதரியும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நாகலட்சுமி அணிந்திருந்த சுமார் 20 சவரன் நகைகளைக் காணவில்லை.

உடனடியாக செந்தில்வேல் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு காவல்துறையினர் ஆய்வு செய்ததில் நகைக்காக நாகலட்சுமி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிரடியாக விசாரணையில் இறங்கிய காவல் துறையினர் நாகலட்சுமியின் எதிர்வீட்டில் வசிக்கும் 17 வயது இளம்பெண்ணைக் கைது செய்தனர்.

காதலுக்காக கழுத்தை அறுத்த இளம்பெண்:இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது, ’எஸ்.வி. நாயுடு வீதியில் வசிக்கும் 17 வயது இளம்பெண் இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அந்த இளைஞரை இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்து கொள்வதற்காக நகைகளைத் திருடவும் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில்தான் நன்கு பழகிய எதிர்வீட்டில் நாகலட்சுமி ஏராளமான நகைகளை அணிந்து வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து அந்த இளம்பெண் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளார். நாகலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவரது நகைகளையும் எடுத்துள்ளார்.

நாகலட்சுமியின் மகன் செந்தில்வேலும் அவரது சகோதரியும் வீட்டிற்குள் வந்த போது அந்த இளம்பெண் சோபா அருகிலேயே மறைந்து இருந்திருக்கிறார். இவர்களைப் பார்த்ததும், பாட்டி கை-கால்களை இழுத்துக் கொண்டு துடித்ததைப் பார்த்து வீட்டிற்குள் வந்தேன் என்று கூறியவரே அங்கிருந்து நைசாக நழுவிவிட்டார்.

நாகலட்சுமி இறந்த தகவல் கிடைத்ததும் நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கினோம். அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தோம். அதில் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் எதிர்வீட்டு இளம்பெண் மட்டுமே நாகலட்சுமியின் வீட்டிற்குள் வந்து சென்றது தெரியவந்தது. முதலில் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரித்தோம். அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார்.

சந்தேகம் வலுத்ததும் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முறைப்படி விசாரித்தோம். அதில் அவர் நாகலட்சுமியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த சுமார் 20 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தோம். நாகலட்சுமியின் பிரேதம் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இளம்பெண்ணைக் கைது செய்ததோடு அவரது காதலரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ இவ்வாறு தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதலனை கரம் பிடிக்க இளம்பெண், மூதாட்டியைக் கொலை செய்து நகையை கொள்ளையடித்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'என் காருக்கு நானே தீ வைத்தேன்' - பகீர் வாக்குமூலம் கொடுத்த பாஜக பிரமுகர்... மனைவி டார்ச்சரால் நிகழ்ந்ததா விபரீதம்?

பொள்ளாச்சி: பொள்ளாச்சி எஸ்.வி. நாயுடு வீதியைச் சேர்ந்தவர், சதாசிவம். சொந்தமாக பஸ் வைத்து இயக்கி வந்தார். இவரது மனைவி நாகலட்சுமி(76 வயது). இவர்களுக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சதாசிவம் இறந்ததும் நாகலட்சுமி அவரது மகன் செந்தில்வேல் உடன் வசித்து வந்தார். இந்நிலையில் செந்தில்வேல் காலை உணவு சாப்பிட வீட்டிலிருந்து சுமார் 10:30 மணிக்கு வெளியே சென்றுள்ளார்.

சாப்பிட்டுவிட்டு 11:15 மணிக்கு வீட்டிற்குத் திரும்பி வந்தபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சோபாவில் தாய் நாகலட்சுமி இறந்துகிடந்தார். அதிர்ச்சியடைந்த செந்தில்வேல் தனது சகோதரிக்குத் தகவல் கொடுத்தார். செந்தில்வேலும் அவரது சகோதரியும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நாகலட்சுமி அணிந்திருந்த சுமார் 20 சவரன் நகைகளைக் காணவில்லை.

உடனடியாக செந்தில்வேல் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு காவல்துறையினர் ஆய்வு செய்ததில் நகைக்காக நாகலட்சுமி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிரடியாக விசாரணையில் இறங்கிய காவல் துறையினர் நாகலட்சுமியின் எதிர்வீட்டில் வசிக்கும் 17 வயது இளம்பெண்ணைக் கைது செய்தனர்.

காதலுக்காக கழுத்தை அறுத்த இளம்பெண்:இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது, ’எஸ்.வி. நாயுடு வீதியில் வசிக்கும் 17 வயது இளம்பெண் இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அந்த இளைஞரை இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்து கொள்வதற்காக நகைகளைத் திருடவும் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில்தான் நன்கு பழகிய எதிர்வீட்டில் நாகலட்சுமி ஏராளமான நகைகளை அணிந்து வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து அந்த இளம்பெண் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளார். நாகலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவரது நகைகளையும் எடுத்துள்ளார்.

நாகலட்சுமியின் மகன் செந்தில்வேலும் அவரது சகோதரியும் வீட்டிற்குள் வந்த போது அந்த இளம்பெண் சோபா அருகிலேயே மறைந்து இருந்திருக்கிறார். இவர்களைப் பார்த்ததும், பாட்டி கை-கால்களை இழுத்துக் கொண்டு துடித்ததைப் பார்த்து வீட்டிற்குள் வந்தேன் என்று கூறியவரே அங்கிருந்து நைசாக நழுவிவிட்டார்.

நாகலட்சுமி இறந்த தகவல் கிடைத்ததும் நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கினோம். அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தோம். அதில் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் எதிர்வீட்டு இளம்பெண் மட்டுமே நாகலட்சுமியின் வீட்டிற்குள் வந்து சென்றது தெரியவந்தது. முதலில் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரித்தோம். அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தார்.

சந்தேகம் வலுத்ததும் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முறைப்படி விசாரித்தோம். அதில் அவர் நாகலட்சுமியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த சுமார் 20 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தோம். நாகலட்சுமியின் பிரேதம் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இளம்பெண்ணைக் கைது செய்ததோடு அவரது காதலரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ இவ்வாறு தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதலனை கரம் பிடிக்க இளம்பெண், மூதாட்டியைக் கொலை செய்து நகையை கொள்ளையடித்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'என் காருக்கு நானே தீ வைத்தேன்' - பகீர் வாக்குமூலம் கொடுத்த பாஜக பிரமுகர்... மனைவி டார்ச்சரால் நிகழ்ந்ததா விபரீதம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.