கோயம்புத்தூர்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான சிலர் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அவ்வீட்டை சோதனையிட்டனர். அப்போது, அங்கு அட்டை பெட்டிகளில் கட்டுகட்டாக போலி 2,000 ரூபாய் நோட்டுகள் பதுக்கு வைத்திருப்பதை கண்டறிந்தனர்.
இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த விருதுநகரை சேர்ந்த காளிமுத்து, நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார், மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 9 அட்டை பெட்டிகளில் இருந்த போலி 2,000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 2 கோயில் கலசம், லேப்டாப், செல் போன்களை பறிமுதல் செய்தனர்.
![fake currency coimbatore fake two thousand rupee notes coimbatore news coimbatore latest news கோயம்புத்தூர் போலி ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் பெரியநாயக்கன்பாளையம் போலி 2000 ரூபாய் நோட்டுகள் கோயில் கலசம் லேப்டாப்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16589683_fake-note.png)
கைதானவர்களிடம் தீவிர விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இருடியம் இருப்பதாக கூறி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலுன் இச்சம்பவம் தொடர்பாக சடகோபன் என்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படங்க: கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 2,765 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்