ETV Bharat / state

சொத்துவரிக்கு அபராத வட்டி அமல் ஆகவில்லை..! சீக்கிரம் கட்டி சலுகையை பயன்படுத்துங்கள் - அமைச்சர் முத்துசாமி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 8:44 PM IST

சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு ஒரு விழுக்காடு அபராத வட்டி விதிக்கும் திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை என்றும் சொத்துவரியை சீக்கிரம் செலுத்து 5 விழுக்காடு சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Minister Muthusamy said Penalty interest for property tax is not implemented prepaid the tax and use the offer
அமைச்சர் முத்துசாமி பேட்டி

அமைச்சர் முத்துசாமி பேட்டி

கோயம்புத்தூர்: சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம் இன்று (செப்.07) நடைபெற்றது. இந்த முகாமினை வீட்டு வசதிவாரிய அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகராட்சி மேயர் கல்பனா மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், மாணவர்களுக்கு கல்வி கடனுக்காக காசோலைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “கோவை மாவட்டத்தில் பல திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தமிழக முதலமைச்சரின் களஆய்வு விரைவில் கோவை உள்பட பல மாவட்டங்களில் இருக்கின்றது. அதற்குள் பல பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.

கடன் உதவி பெற 3 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்து இருக்கின்றனர். 20 வங்கிகள் இதில் பங்கு பெற்று இருக்கின்றனர். அனைவரும் இன்றைய தினமே கடன் தொகையைப் பெற இருக்கின்றனர். அடுத்த கட்டமாக வருகிற 10ஆம் தேதி கோவை ஈச்சனாரி பகுதியிலுள்ள கற்பகம் கல்லூரியில் இந்த கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது.

மாணவர்கள் தடையின்றி கல்வி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த கல்வி கடன் உதவி திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இதே போல காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்க தொகை திட்டம், வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகின்றது. மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

கோவையில் இருந்து மருதமலை செல்லும் போது வாகன நெரிசல் ஏற்படுகின்றது. 2 மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது என புகார்கள் வந்த நிலையில், அதை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றது. கோவையில் 13 கோடி ரூபாய் மதிப்பினாலான திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் வரும்போது புதியதாக பல திட்டங்கள் கேட்டுப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் போக்குவரத்து நெரிசல்களை தீர்க்க அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோவை மாநகராட்சியில் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு ஒரு விழுக்காடு அபராத வட்டி விதிக்கும் திட்டம் இன்னமும் அமலுக்கு வரவில்லை. இதற்கு உரிய கால அவகாசம் கொடுக்க சொல்லலாம். அதே வேளையில் வரிகளை சீக்கிரம் செலுத்தி விட்டால் அபராத வட்டி விதிப்பை தவிர்த்து விடலாம்.

வரிகளை முன்னதாக செலுத்தும் நபர்களுக்கு 5 விழுக்காடு வரை சலுகைகள் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும்,
மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை முறையாக அள்ளுவதற்கு கவனம் செலுத்த சொல்லலாம், தெருநாய், கால்நடை போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் நீதிமன்ற உத்தரவுபடி செயல்பட வேண்டி இருக்கிறது” என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: One Day HM: ஒரு நாள் தலைமை ஆசிரியரான பள்ளி மாணவர்.. பொள்ளாச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!

அமைச்சர் முத்துசாமி பேட்டி

கோயம்புத்தூர்: சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம் இன்று (செப்.07) நடைபெற்றது. இந்த முகாமினை வீட்டு வசதிவாரிய அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகராட்சி மேயர் கல்பனா மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், மாணவர்களுக்கு கல்வி கடனுக்காக காசோலைகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “கோவை மாவட்டத்தில் பல திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தமிழக முதலமைச்சரின் களஆய்வு விரைவில் கோவை உள்பட பல மாவட்டங்களில் இருக்கின்றது. அதற்குள் பல பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.

கடன் உதவி பெற 3 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்து இருக்கின்றனர். 20 வங்கிகள் இதில் பங்கு பெற்று இருக்கின்றனர். அனைவரும் இன்றைய தினமே கடன் தொகையைப் பெற இருக்கின்றனர். அடுத்த கட்டமாக வருகிற 10ஆம் தேதி கோவை ஈச்சனாரி பகுதியிலுள்ள கற்பகம் கல்லூரியில் இந்த கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது.

மாணவர்கள் தடையின்றி கல்வி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த கல்வி கடன் உதவி திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இதே போல காலை உணவு திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்க தொகை திட்டம், வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகின்றது. மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

கோவையில் இருந்து மருதமலை செல்லும் போது வாகன நெரிசல் ஏற்படுகின்றது. 2 மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது என புகார்கள் வந்த நிலையில், அதை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றது. கோவையில் 13 கோடி ரூபாய் மதிப்பினாலான திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் வரும்போது புதியதாக பல திட்டங்கள் கேட்டுப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் போக்குவரத்து நெரிசல்களை தீர்க்க அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோவை மாநகராட்சியில் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு ஒரு விழுக்காடு அபராத வட்டி விதிக்கும் திட்டம் இன்னமும் அமலுக்கு வரவில்லை. இதற்கு உரிய கால அவகாசம் கொடுக்க சொல்லலாம். அதே வேளையில் வரிகளை சீக்கிரம் செலுத்தி விட்டால் அபராத வட்டி விதிப்பை தவிர்த்து விடலாம்.

வரிகளை முன்னதாக செலுத்தும் நபர்களுக்கு 5 விழுக்காடு வரை சலுகைகள் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும்,
மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை முறையாக அள்ளுவதற்கு கவனம் செலுத்த சொல்லலாம், தெருநாய், கால்நடை போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் நீதிமன்ற உத்தரவுபடி செயல்பட வேண்டி இருக்கிறது” என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: One Day HM: ஒரு நாள் தலைமை ஆசிரியரான பள்ளி மாணவர்.. பொள்ளாச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.