ETV Bharat / state

பெரியார் குறித்து அவதூறு: ரஜினிக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார்! - ரஜினிகாந்த்துக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் மனு

கோவை: தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி காவல் துணை கண்காணிப்பாளரிடம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Dravidar Viduthalai Kazhagam demands action against Rajini
Dravidar Viduthalai Kazhagam demands action against Rajini
author img

By

Published : Jan 21, 2020, 8:09 AM IST

சென்னையில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் பெரியார் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை எழுப்பியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கோவை மாநகர காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் வெள்ளிங்கிரி, "1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ‘ராமர் - சீதை’ ஆகியோரின் படங்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்துக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் மனு

இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும் பொது அமைதியை குலைக்கும் நோக்கத்தில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153A மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெளியிடும் திரையரங்குளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்புணர்வு - இளைஞருக்கு ஆயுள்

சென்னையில் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் பெரியார் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை எழுப்பியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி கோவை மாநகர காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் வெள்ளிங்கிரி, "1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ‘ராமர் - சீதை’ ஆகியோரின் படங்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்துக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் மனு

இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும் பொது அமைதியை குலைக்கும் நோக்கத்தில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153A மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெளியிடும் திரையரங்குளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்புணர்வு - இளைஞருக்கு ஆயுள்

Intro:petitionBody:petitionConclusion: தந்தை பெரியார் பற்றி அவதூறு மட்டும் வதந்தியை பரப்பிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி துணை கண்காணிப்பாளரிடம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது பொள்ளாச்சி 20 சென்னையில் கடந்த 14ம் தேதி துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ராமர் சீதை ஆகிய உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் அதிகமாக பேசியுள்ளார் இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலை பரப்பி தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வதந்தியை பரப்பி பொது அமைதியை குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 153a மற்றும் 505 ஐபிசி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்கள் திரையிட விடமாட்டோம் என தெரிவித்தனர். பேட்டி -வெள்ளிங்கிரி மாவட்ட செயலாளர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.