ETV Bharat / state

சாலை விரிவாக்கத்தில் அரசு மருத்துவமனை சேதமடையாது: கலெக்டர் உறுதி

கோவை : பொள்ளாச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை அருகில் சாலை விரிவாக்கம் பணியில் மருத்துவமனைக்கு எந்த சேதமும் ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வுசெய்து உறுதியளித்தார் .

author img

By

Published : Aug 23, 2019, 3:57 PM IST

Updated : Aug 23, 2019, 5:26 PM IST

சாலை வரிவாத்தில் அரசு மருத்துவமனைக்கு எந்த சேதமும் வராது.

பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

”மருத்துவமனையில் சென்ற வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த ரத்த வங்கி சீரமைப்பு பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்காலிகமாக ரத்த சேமிப்பு வங்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின்போது அரசு மருத்துவமனை கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார். இதனையடுத்து, மருத்துவமனையின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட அவர், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

”மருத்துவமனையில் சென்ற வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த ரத்த வங்கி சீரமைப்பு பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்காலிகமாக ரத்த சேமிப்பு வங்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின்போது அரசு மருத்துவமனை கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார். இதனையடுத்து, மருத்துவமனையின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட அவர், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Intro:ghBody:ghConclusion:பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் கோவை மாவட்ட கலெக்டர் ஆய்வு
சாலை விரிவாக்கத்தின் போது மருத்துவமனை கட்டிடங்கள் பாதிக்கப்படாது என தகவல்


பொள்ளாச்சி ஆக 22.

பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்று கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் நேரில் சென்று பார்வையிட்டு, நோயாளிகளிடம் குறைகளை கேட்டார். மேலும் கடந்த வாரம் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட ரத்த வங்கி கட்டிடத்தயும் பார்வையிட்டு, விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட இராசாமணி,
இரத்த வங்கி சீரமைக்கும் பணிக்கு நிதி வழங்கப்படும் என்றும், தற்காலிகமாக ரத்த சேமிப்புக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது அரசு மருத்துவமனை கட்டிடங்களுக்கு, பதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், பொள்ளாச்சியில் மழை மற்றும் காட்டு யானைகளால் பாதிக்கப்பட்டு வரும் நவமலை மற்றும் சர்கார்பதி பகுதி மலைவாழ் மக்களுக்கு வனத்துறை மூலம் வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பேட்டி : ராசாமனி : கோவை மாவட்ட கலெக்டர்
Last Updated : Aug 23, 2019, 5:26 PM IST

For All Latest Updates

TAGGED:

gh collector
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.