பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
”மருத்துவமனையில் சென்ற வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த ரத்த வங்கி சீரமைப்பு பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்காலிகமாக ரத்த சேமிப்பு வங்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின்போது அரசு மருத்துவமனை கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார். இதனையடுத்து, மருத்துவமனையின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட அவர், நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.