கோவை மாவட்டம் பாரதியார் பல்கலைக்கழகம் உயர்த்திய தேர்வு கட்டணத்தை கண்டித்து அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தேர்வு கட்டணத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டணத்தை குறைக்க வேண்டுமெனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர். இக்கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், இவை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.