ETV Bharat / state

கோவை சிறுமி பாலியல் வழக்கில் ஒருவர் கைது -தனிப்படை போலீசார் அதிரடி - CHILD RAPE MURDER

கோவை: பன்னிமடை அருகே சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ் என்பவரை தனிப்படை காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.

கோவை சிறுமி பாலியல்
author img

By

Published : Mar 31, 2019, 1:06 PM IST

கோவை பன்னிமடை அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் புதூர் பகுதியில் துப்புரவுப் பணியாளர்களின் ஏழு வயது மகள் மார்ச் 25ஆம் தேதி காமுகர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல் துறையினர் 14 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த ஆறு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், சிறுமியின் வீட்டின் அருகேயிருந்த சந்தோஷ் என்பவர் சம்பவம் நடந்த தினத்திலிருந்து தலைமறைவானதாக தெரிகிறது.

இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடிவந்தனர். இதையடுத்து, இன்று காலை சந்தோஷை கைது செய்த காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நமக்கு கிடைத்த தகவலின்படி:

  • தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சந்தோஷ் கோவை தொண்டாமுத்தூர் உலியாம்பாளையம் பகுதியில் தனியாக வசித்துவந்தார்.
  • அவ்வப்போது கஸ்தூரி நாயக்கன் பாளையம் புதூரில் உள்ளதனது பாட்டி வீட்டிற்கு சந்தோஷ் வருவது வழக்கம்.
  • அப்போது, சிறுமியை நீண்ட நாட்களாக நோட்டம் விட்டு வந்ததாக தெரிகிறது.
  • இதையடுத்து, சம்பவத்தன்று தனது காம சொரூபத்தை வெளிப்படுத்தி அப்பாவி சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்துள்ளார்.
  • இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்த முழு விவரங்கள் இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் எனதனிப்படை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை பன்னிமடை அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் புதூர் பகுதியில் துப்புரவுப் பணியாளர்களின் ஏழு வயது மகள் மார்ச் 25ஆம் தேதி காமுகர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல் துறையினர் 14 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த ஆறு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், சிறுமியின் வீட்டின் அருகேயிருந்த சந்தோஷ் என்பவர் சம்பவம் நடந்த தினத்திலிருந்து தலைமறைவானதாக தெரிகிறது.

இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடிவந்தனர். இதையடுத்து, இன்று காலை சந்தோஷை கைது செய்த காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நமக்கு கிடைத்த தகவலின்படி:

  • தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சந்தோஷ் கோவை தொண்டாமுத்தூர் உலியாம்பாளையம் பகுதியில் தனியாக வசித்துவந்தார்.
  • அவ்வப்போது கஸ்தூரி நாயக்கன் பாளையம் புதூரில் உள்ளதனது பாட்டி வீட்டிற்கு சந்தோஷ் வருவது வழக்கம்.
  • அப்போது, சிறுமியை நீண்ட நாட்களாக நோட்டம் விட்டு வந்ததாக தெரிகிறது.
  • இதையடுத்து, சம்பவத்தன்று தனது காம சொரூபத்தை வெளிப்படுத்தி அப்பாவி சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்துள்ளார்.
  • இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது குறித்த முழு விவரங்கள் இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் எனதனிப்படை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சு.சீனிவாசன்.         கோவை


சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ்குமார் என்பவர் கைது...


கோவை பன்னிமடை அடுத்த கஸ்தூரி நாயக்கன் பாளையம் புதூர் பகுதியில் துப்புரவு பணியாளர்களின் ஏழு வயது மகள் கடந்த திங்கட்கிழமை மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டாள் இது தொடர்பாக 14 தனிப்படைகளை அமைத்து துடியலூர் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர் மேலும் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வந்தது இந்த சூழலில் சிறுமியின்  வீட்டருகே இருந்த சந்தோஷம் என்பவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 சம்பவம் நடைபெற்ற அன்று சந்தோஷ் தனது பாட்டி வீடான கஸ்தூரி நாயக்கன் பாளையம் புதூருக்கு  தெரியவந்துள்ளது.
 இதனைத் தொடர்ந்து அன்று முதல் சந்தோஷ் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரை தனிப்படை  போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர் சந்தோஷ் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்வது உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இதனைத் தொடர்ந்து சந்தோசை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோவை தொண்டாமுத்தூர் உலியாம்பாளையம்  பகுதியில் வசித்து வந்த சந்தோஷ் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் தனியாக வசித்து வருகிறார் அவ்வப்போது கஸ்தூரி நாயக்கன் பாளையம் புதூரில் உள்ள  தனது பாட்டி வீட்டிற்கு சந்தோஷ் வரும் நிலையில் சிறுமியை நீண்ட நாட்களாக நோட்டம் விட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற அன்றும் சந்தோஷ் வந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர் எனினும் இதுவரை முழு விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை இன்று மாலை அல்லது நாளை காலையில் முழு விவரங்கள் தெரியும் என தனிப்படை போலீசார் தெரிவிக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.