ETV Bharat / state

சினிமா பாணியில் கார் திருட்டு: போலீசார் விசாரணை

author img

By

Published : Jan 5, 2023, 2:26 PM IST

Updated : Jan 5, 2023, 2:35 PM IST

கார் வாங்குவது போல் நடித்து உரிமையாளரை கத்தியால் தாக்கிவிட்டு காரை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சினிமா பாணியில் கார் திருட்டு
கார் வாங்குவது போல் நடித்து திருட்டு

சினிமா பாணியில் கார் திருட்டு

கோயம்புத்தூர்: விவிகே நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், கார்களுக்கு ஸ்டிக்கர் செய்யும் பணி செய்து வருகிறார். இவர் தனது பழைய காரை விற்பனை செய்வதற்காக ஓஎல்எக்ஸ்-ல் விளம்பரம் செய்தார். இவரது காரை வாங்குவதற்காக இரண்டு பேர் வெங்கடேஷின் வீட்டிற்கு வந்தனர்.

அப்போது காரை ஓட்டி பார்க்க வேண்டும் என மர்ம நபர்கள் கேட்டனர். இதனால் அவர்களை காரில் அழைத்துச் சென்றார். கார் வீட்டில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களில் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் திடிரென வெங்கடேஷின் கழுத்து மற்றும் கையில் கத்தியால் தாக்கினார்.

இதனால் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக வெங்கடேஷ் காரில் இருந்து குதித்தார். இதையடுத்து மர்ம நபர்கள் வேகமாக காருடன் தப்பிச் சென்றனர். காரை ஓட்டிச் சென்ற மர்ம நபர்கள் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவரை இடித்து விட்டு வேகமாக சென்றனர். இதில் பெண்ணுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அவர்கள் அங்கிருந்தும் தப்பினர். இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கார் சென்ற திசை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து வெங்கடேஷ் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Viral video: மது விலையை அதிகரித்து விற்கும் விற்பனையாளர்!

சினிமா பாணியில் கார் திருட்டு

கோயம்புத்தூர்: விவிகே நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், கார்களுக்கு ஸ்டிக்கர் செய்யும் பணி செய்து வருகிறார். இவர் தனது பழைய காரை விற்பனை செய்வதற்காக ஓஎல்எக்ஸ்-ல் விளம்பரம் செய்தார். இவரது காரை வாங்குவதற்காக இரண்டு பேர் வெங்கடேஷின் வீட்டிற்கு வந்தனர்.

அப்போது காரை ஓட்டி பார்க்க வேண்டும் என மர்ம நபர்கள் கேட்டனர். இதனால் அவர்களை காரில் அழைத்துச் சென்றார். கார் வீட்டில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களில் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் திடிரென வெங்கடேஷின் கழுத்து மற்றும் கையில் கத்தியால் தாக்கினார்.

இதனால் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக வெங்கடேஷ் காரில் இருந்து குதித்தார். இதையடுத்து மர்ம நபர்கள் வேகமாக காருடன் தப்பிச் சென்றனர். காரை ஓட்டிச் சென்ற மர்ம நபர்கள் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவரை இடித்து விட்டு வேகமாக சென்றனர். இதில் பெண்ணுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அவர்கள் அங்கிருந்தும் தப்பினர். இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கார் சென்ற திசை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து வெங்கடேஷ் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Viral video: மது விலையை அதிகரித்து விற்கும் விற்பனையாளர்!

Last Updated : Jan 5, 2023, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.