ETV Bharat / state

'தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என உழைக்கும் திமுக...!' - பாஜக சாடல்

கோவை: திமுக தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என உழைப்பதாக பாஜக மூத்தத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.

author img

By

Published : Dec 20, 2019, 11:47 PM IST

Updated : Dec 21, 2019, 4:04 PM IST

பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோவையில் பாஜக, இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்தத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன், "குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது தேசத்தைக் காக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவந்த சட்டம், தேச நலனில் அக்கறை கொண்டு இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு எந்தப் பாதிப்பையும் இது ஏற்படுத்தவில்லை. ஆனால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டில் ஸ்டாலின், திருமாவளவன், வைகோ போன்றவர்களும் இதற்காகப் போராடிவருவது வேடிக்கையாக உள்ளது.

பாஜக மூத்தத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி

எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை இந்தச் சட்டம் தடுக்கும். திமுக தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என உழைக்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் ஈழத்தில் குடியேறினால் மட்டுமே அங்குள்ள தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாதாளச் சாக்கடை, சாலை சீரமைப்பு வலியுறுத்தி வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோவையில் பாஜக, இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்தத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன், "குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது தேசத்தைக் காக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவந்த சட்டம், தேச நலனில் அக்கறை கொண்டு இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு எந்தப் பாதிப்பையும் இது ஏற்படுத்தவில்லை. ஆனால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டில் ஸ்டாலின், திருமாவளவன், வைகோ போன்றவர்களும் இதற்காகப் போராடிவருவது வேடிக்கையாக உள்ளது.

பாஜக மூத்தத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி

எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை இந்தச் சட்டம் தடுக்கும். திமுக தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என உழைக்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் ஈழத்தில் குடியேறினால் மட்டுமே அங்குள்ள தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாதாளச் சாக்கடை, சாலை சீரமைப்பு வலியுறுத்தி வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Intro:இங்குள்ள இலங்கை தமிழர்கள் ஈழத்தில் குடியேறினால் மட்டுமே அங்குள்ள தமிழர்களுக்கு உரிமைகளை நிலைநாட்டுவதற்க்கும் ,பாதுக்காப்பதற்கும் உதவிகரமாக இருக்கும் என பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.Body:குடியுரிமை சட்டத்தைக் உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனக்கோரி கோவையில் பாஜக மற்றும் இந்து முன்னனியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்,
குடியுரிமை சட்டதிருத்தம் என்பது தேசத்தைக் காக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வந்த சட்டம் என்றும்,இந்த தேசம் என்பது ஒரு சத்திரம் போல,யார் வேண்டுமானாலும் குடியேறலாம்,யார் வேண்டுமானாலும் கலவரத்தைக் உண்டு பண்ணலாம் என்ற நிலையைக் மாற்றி தேச நலனில் அக்கறை கொண்டு இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது..என அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்க்கு எந்த பாதிப்பையும் இது ஏற்படுத்த வில்லை..என்றும்
ஆனால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் ஸ்டாலின் ,திருமாவளவன்,வைகோ போன்றவர்கள் பங்களா தேஷிலிருந்து வரும் மக்களைக் பாதுக்காக வேண்டும் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது..எனவும் அவர் தெரிவித்தார்..

எல்லை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலைக் இந்த சட்டம் தடுப்பதாக தெரிவித்த அவர்,
திமுக தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என உழைக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினர்..

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முஸ்லிம் மத வெறியை தூண்டுவதாக கூறிய அவர்,இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் ஒருவார்த்தை கூட பேசவில்லை.எனத்தெரிவித்த அவர்,
இஸ்லாமிய தீவிரவாதிகளை தூண்டும் விதமாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முயல்கிறது..ஆனால் மக்கள் தெளிவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற இவர்களின் இருமாப்பு கலைந்து போகும் என்று பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன்,
மக்கள் ஒன்று திரட்டிய ஜல்லிகட்டு போராட்டத்தைக்,ஏதோ இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்புகள் தான் கொண்டு சேர்த்தார்கள் என்ற அவர்கள் உருவக படுத்தியதைபோல் தற்போதும் அதேபோல் முயல்கிறார்கள்..இதில் அவர்கள் நிச்சயம் தோல்வி அடைவர்கள்..என்றும்
இங்குள்ள இலங்கை தமிழர்கள் ஈழத்தில் குடியேறினால் மட்டுமே அங்குள்ள தமிழர்களுக்கு உரிமைகளை நிலைநாட்டுவதற்க்கும் ,பாதுக்காப்பதற்கும் உதவும் என பேசிய அவர்,அப்படி தமிழர்கள் அதைக் மீறி வந்தால், நமது அரசு அதைக் கனிவுடன் பரீசிலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்..
Conclusion:
Last Updated : Dec 21, 2019, 4:04 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.