ETV Bharat / state

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு: இளைஞர் போக்சோவில் கைது! - 16-year-old girl sexually abused in Coimbatore

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

A Young Man Arrested Under Pocso Act In Coimbatore  Pocso Act  16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோவில் கைது  போக்சோ சட்டம்  கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  16-year-old girl sexually abused in Coimbatore  A youth who sexually assaulted a 16-year-old girl has been arrested in Pocso
A Young Man Arrested Under Pocso Act In Coimbatore
author img

By

Published : Feb 16, 2021, 8:45 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பள்ளியில் படித்து வந்த நிலையில், தனது தோழியின் அண்ணன் சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமி தனது தோழியின் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார்.

அப்போது, வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட சக்திவேல் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த பெற்றோர் சிறுமியை கண்டித்து, கேரளாவில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த, இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது.

இது குறித்து பொள்ளாச்சி காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பாலுறவுக்கு கூப்பிட்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பெண்: வைரல் காணொலி!

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பள்ளியில் படித்து வந்த நிலையில், தனது தோழியின் அண்ணன் சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமி தனது தோழியின் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார்.

அப்போது, வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட சக்திவேல் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த பெற்றோர் சிறுமியை கண்டித்து, கேரளாவில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த, இரண்டு நாள்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது.

இது குறித்து பொள்ளாச்சி காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பாலுறவுக்கு கூப்பிட்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பெண்: வைரல் காணொலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.