ETV Bharat / state

கார் மீது சரக்கு வாகனம் நேருக்குநேர் மோதல்; தம்பதி உட்பட 3 பேர் பலி!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் ஆம்னி காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், காரில் வந்த கணவன், மனைவி உட்பட 3 பேர் பலியாகினர். பலத்த காயமடைந்த இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

author img

By

Published : Jul 9, 2019, 6:29 PM IST

கார் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் விபத்து - 3 பேர் பலி!

உடுமலை சிவசக்தி காலனியை சேர்ந்தவர் சம்பத்குமார் (62). இவர் தனது மனைவி பேபிகமலம் (55), கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் மனைவி மற்றும் அவரது தங்கை ஜோதிமணி உடன் சம்பத்குமார், உடுமலைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பொள்ளாச்சி அடுத்த கோலார்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் நேருக்குநேர் வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வேலுச்சாமி, சம்பத்குமார் மற்றும் அவரது மனைவி பேபி கமலம் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பத்குமார், பேபிகமலம் தம்பதி
சம்பத்குமார், பேபிகமலம் தம்பதி

சத்தத்தைக் கேட்டு வந்த வாகன ஓட்டிகள், காரில் படுகாயத்துடன் இருந்த ஜோதிமணி மற்றும் சரக்கு வாகனம் ஓட்டுநர் ஆனந்த் ஆகியோரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து கோமங்கலம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனால் பொள்ளாச்சி உடுமலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கார் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் விபத்து - 3 பேர் பலி!

உடுமலை சிவசக்தி காலனியை சேர்ந்தவர் சம்பத்குமார் (62). இவர் தனது மனைவி பேபிகமலம் (55), கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் மனைவி மற்றும் அவரது தங்கை ஜோதிமணி உடன் சம்பத்குமார், உடுமலைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பொள்ளாச்சி அடுத்த கோலார்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் நேருக்குநேர் வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வேலுச்சாமி, சம்பத்குமார் மற்றும் அவரது மனைவி பேபி கமலம் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பத்குமார், பேபிகமலம் தம்பதி
சம்பத்குமார், பேபிகமலம் தம்பதி

சத்தத்தைக் கேட்டு வந்த வாகன ஓட்டிகள், காரில் படுகாயத்துடன் இருந்த ஜோதிமணி மற்றும் சரக்கு வாகனம் ஓட்டுநர் ஆனந்த் ஆகியோரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து கோமங்கலம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனால் பொள்ளாச்சி உடுமலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கார் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் விபத்து - 3 பேர் பலி!
Intro:3 nosdethBody:3nosdethConclusion:பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் அம்னி காரும் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் பலி - இரண்டு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

பொள்ளாச்சி -ஜூலை -9
உடுமலை சிவசக்தி காலனியை சேர்ந்தவர் சம்பத்குமார் (62) இவரது மனைவி பேபிகமலம் (55) பேபி காலத்திற்கு காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக இன்று உடுமலைப்பேட்டை இருந்து வாடகை கார் மூலம் சம்பத்குமார் பேபிகமலம் இவரது தங்கை ஜோதிமணி ஆகியோர் கோவையில் உள்ள மருத்துவமனை சென்று வந்து கொண்டிருந்தனர், அப்போது தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சரக்கு ஆட்டோ மூலம் மாம்பழத்தை எடுத்துக் கொண்டு கேரளா மாநிலம் மங்களூரில் இறக்கிவிட்டு மீண்டும் இன்று பெரியகுளம் திரும்பிக்கொண்டிருந்த போது பொள்ளாச்சி அடுத்த கோலார்பட்டி சுங்கம் அருகே வளைவான பகுதியில் முன்னே சென்ற வாகனத்தை முந்தி சென்றபோது கார் மீது நேருக்கு நேர் மோதியது, இதில் காரை ஓட்டி வந்த வேலுச்சாமி மற்றும் சம்பத்குமார் இவரது மனைவி பேபி கமலம் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், பின்னர் சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காரில் படுகாயத்துடன் இருந்த பேபி கமலத்தின் தங்கை ஜோதிமணி, சரக்கு ஆட்டோ டிரைவர் ஆனந்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர், பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த கோமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர், இந்த விபத்து காரணமாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேட்டி பெயர் - மணிகண்டன் ( உடுமலை), விபத்தை நேரில் பார்த்தவர்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.