ETV Bharat / state

ஆளுநர் இல்ல விழாவில் செண்டை மேளம் வாசித்து மகிழ்ந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா...!

author img

By

Published : Nov 3, 2022, 11:44 AM IST

Updated : Nov 3, 2022, 2:15 PM IST

மணிப்பூர் ஆளுநரும், மேற்குவங்க பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன் இல்ல விழாவுக்கு வருகை தந்த, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செண்டை மேளம் வாசித்து மகிழ்ந்தார்.

ஆளுநர் இல்ல விழாவில் செண்டை மேளம் வாசித்து மகிழ்ந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா
ஆளுநர் இல்ல விழாவில் செண்டை மேளம் வாசித்து மகிழ்ந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா

சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மேற்குவங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசனின் அண்ணன் சதாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று சென்னை வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முதலமைச்சர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்நிலையில் இன்று விழாவுக்கு வருகை தந்த மம்தா பானர்ஜி, வரவேற்பதற்காக வாசிக்கப்பட்ட செண்டை மேளத்தை ரசித்து பார்த்து அவரும் வாசித்தார். பின்னர் அவர் விழாவில் பங்கேற்றார்.

ஆளுநர் இல்ல விழாவில் செண்டை மேளம் வாசித்து மகிழ்ந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா

விழாவில், முதலமைச்சர் முக ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்

இதில் நடிகர் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்போது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இல.கணேசன் இல்ல விழாவில் இரண்டு மாநில முதலமைச்சர்கள், ஆளுநர், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ஒரே நேரத்தில் வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் மற்றும் ஜி.கே.வாசன்
விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் மற்றும் ஜி.கே.வாசன்

இதையும் படிங்க: ’கோபிந்தோபோக்’ அரிசி ஏற்றுமதிக்கான சுங்க வரி விலக்கு வேண்டும்.. மம்தா கோரிக்கை

சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மேற்குவங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசனின் அண்ணன் சதாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று சென்னை வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முதலமைச்சர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்நிலையில் இன்று விழாவுக்கு வருகை தந்த மம்தா பானர்ஜி, வரவேற்பதற்காக வாசிக்கப்பட்ட செண்டை மேளத்தை ரசித்து பார்த்து அவரும் வாசித்தார். பின்னர் அவர் விழாவில் பங்கேற்றார்.

ஆளுநர் இல்ல விழாவில் செண்டை மேளம் வாசித்து மகிழ்ந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா

விழாவில், முதலமைச்சர் முக ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்

இதில் நடிகர் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்போது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இல.கணேசன் இல்ல விழாவில் இரண்டு மாநில முதலமைச்சர்கள், ஆளுநர், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ஒரே நேரத்தில் வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் மற்றும் ஜி.கே.வாசன்
விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் மற்றும் ஜி.கே.வாசன்

இதையும் படிங்க: ’கோபிந்தோபோக்’ அரிசி ஏற்றுமதிக்கான சுங்க வரி விலக்கு வேண்டும்.. மம்தா கோரிக்கை

Last Updated : Nov 3, 2022, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.