ETV Bharat / state

போலி பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மீது விக்கிரமராஜா புகார்! - Vikaramaraja

சென்னை: வணிக நிறுவனங்களை மிரட்டிப் பணம் பறிக்கும் போலி பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

Vikaramaraja
author img

By

Published : Nov 15, 2019, 11:29 PM IST

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா புகார் ஒன்றை அளித்தார். அதில், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் போர்வையில், சில கும்பல் தனியார் வணிக நிறுவனங்கள், உணவகங்களில், உரிமையாளர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற கும்பல்களிடமிருந்து வணிகர்களைப் பாதுகாக்கவும், பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்படும் போலிப் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், எந்த ஒரு ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களும் ஊடகங்கள் தொடர்பான ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டாமல் இருக்க, நடவடிக்கை எடுத்தால் பத்திரிகையாளர் போர்வையில் கட்டப் பஞ்சாயத்து நடத்தும் நபர்களைப் பிடித்து நடவடிக்கை, எடுக்க ஏதுவாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை காவல்துறை ஆணையரைச் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளதாக கூறிய விக்கிரமராஜா, அண்மையில், சரவணா தங்க நகை மாளிகையில் நுழைந்து பணம் பறிக்க முயன்ற 9 பேரைக் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறைக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா புகார் ஒன்றை அளித்தார். அதில், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் போர்வையில், சில கும்பல் தனியார் வணிக நிறுவனங்கள், உணவகங்களில், உரிமையாளர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற கும்பல்களிடமிருந்து வணிகர்களைப் பாதுகாக்கவும், பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்படும் போலிப் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், எந்த ஒரு ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களும் ஊடகங்கள் தொடர்பான ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டாமல் இருக்க, நடவடிக்கை எடுத்தால் பத்திரிகையாளர் போர்வையில் கட்டப் பஞ்சாயத்து நடத்தும் நபர்களைப் பிடித்து நடவடிக்கை, எடுக்க ஏதுவாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை காவல்துறை ஆணையரைச் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளதாக கூறிய விக்கிரமராஜா, அண்மையில், சரவணா தங்க நகை மாளிகையில் நுழைந்து பணம் பறிக்க முயன்ற 9 பேரைக் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறைக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா மீது பணம் மோசடி புகார்!

Intro:Body:வணிக நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் போலி பத்திரிக்கையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்.

தனியார் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்ரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு விக்கிரமராஜா புகார் ஒன்றை அளித்தார்.இந்த மனுவில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போர்வையில் சுற்றும் சில கும்பல் தனியார் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் தகராறு செய்து அதன் உரிமையாளர்களை மிரட்டி லட்சக் கணக்கில் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், இது போன்ற கும்பல்களிடம் இருந்து வணிகர்களை காவல்துறையினர் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்படும் போலி பத்திரிக்கையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், எந்த ஒரு ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்களும் ஊடகங்கள் தொடர்பான ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்மூலம் பத்திரிக்கையாளர் போர்வையில் சுற்றித்திரிந்து கட்ட பஞ்சாயத்து நடத்தும் நபர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் ஏதுவாக இருக்கும் எனவும் அவர் கூறினார். மேலும், இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளதாக கூறிய அவர் சமீபத்தில் சரவணா தங்கநகை மாளிகையில் நுழைந்து பணம் பறிக்க முயன்ற 9 பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.